ஆப்நகரம்

சென்னையில் ஐபோன் ஆலை மீண்டும் திறப்பு! ஊழியர்கள் மகிழ்ச்சி!

ஜனவரி 12ஆம் தேதி ஆப்பிள் ஐபோன் உற்பத்தி ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 10 Jan 2022, 6:37 pm
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் நகரத்தில் ஃபாக்ஸ்கான் ஆலை உள்ளது. இங்குதான் ஆப்பிள் ஐபோன் அசெம்பிளிங் பணி நடைபெற்று வந்தது. இந்த ஆலையில் சுமார் 17,000 பேர் பணியாற்றி வந்தனர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சுற்றியுள்ள தொழிலாளர்கள் பலர் இந்த ஆலையை நம்பியே உள்ளனர். இந்நிலையில் சென்ற டிசம்பர் மாதத்தில் உணவில் பிரச்சினை என்று பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உணவு சரியில்லாத காரணத்தால் சுமார் 250 ஊழியர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதனால் டிசம்பர் 18ஆம் ஃபாக்ஸ்கான் ஆலை இழுத்து மூடப்பட்டது.
Samayam Tamil foxconn


கேண்டீனில் போதிய வசதி இல்லாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு நிறுவனம் தரப்பிலிருந்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், ஜனவரி 12ஆம் தேதி ஃபாக்ஸ்கான் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இதற்கான உத்தரவை வெள்ளிக் கிழமையே வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. ஃபாக்ஸ்கான் ஆலை திறந்தவுடன் அதிகபட்சம் 500 பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஒமைக்ரான் பிரச்சினை இருப்பதால் எஞ்சிய பணியாளர்களுக்கும் வேலை கிடைக்குமா என்று தெரியவில்லை.

கார் விற்பனை: கெத்து காட்டும் டாடா நிறுவனம்!
ஃபாக்ஸ்கான் ஆலையில்தான் ஐபோன் 12 மாடல் தயாரிக்கப்பட்டு வந்தது. அதேபோல, ஐபோன் 13 மாடலுக்கான டெஸ்டிங் பணிகளும் நடைபெற்று வந்தன. ஃபாக்ஸ்கான் ஆலை திறந்தவுடன் அரசு தரப்பிலிருந்து ஊழியர்களுக்கு தங்கும் விடுதி கட்டித்தரப்படும் என்று கூறப்படுகிறது. ஊழியர்களுக்கான உணவுப் பிரச்சினையும் தீர்ந்து தரமான உணவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்