ஆப்நகரம்

மறைமுக வரிவிதிப்புகளை கைவிடும்படி அருண் ஜேட்லிக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மறைமுகமாக விதிக்கப்பட்டுள்ள வரிகளைக் கைவிடும்படி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

TNN 12 Feb 2017, 7:10 pm
நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மறைமுகமாக விதிக்கப்பட்டுள்ள வரிகளைக் கைவிடும்படி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil chidambaram asks fm jaitley to cut indirect taxes immediately
மறைமுக வரிவிதிப்புகளை கைவிடும்படி அருண் ஜேட்லிக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்


மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்த, 2017-18ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் பற்றி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அதிருப்தி தெரிவித்து வருகிறார். பட்ஜெட் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில வரிவிதிப்புகள் பற்றி, ஆட்சேபனையும் தெரிவித்துள்ள அவர், தேவையற்ற அத்தகைய மறைமுக வரிவிதிப்புகளை திருப்பிப் பெறும்படி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

‘’பட்ஜெட்டின் உண்மையான நோக்கம் என்னவென்றே தெரிவிக்கப்படாத சூழலில், தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தும் பணிகளை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மேற்கொண்டுள்ளார். பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி அவர், இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. சேவை வரிகள் உள்பட பல மறைமுக வரிவிதிப்புகள் மக்களின் கழுத்தை நெரிப்பதைப் போல அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனை மறுபரிசீலனை செய்வது அவசியம்,’’ என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Former finance minister P Chidambaram, who feels the Union Budget for 2017-18 is "aimless and directionless", has said that the government should immediately cut indirect taxes across the board to revive the sagging economy.

அடுத்த செய்தி

டிரெண்டிங்