ஆப்நகரம்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

Samayam Tamil 15 Aug 2022, 9:30 am
இந்தியாவின் 76ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
Samayam Tamil mk stalin


அதில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவித்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 2022 ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தப்படும்.

இதன் மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 1947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும்” என்று அறிவித்துள்ளார். தற்போது தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும்.

கடன் வாங்கியவர்களை தொல்லை செய்யக்கூடாது.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!
இவ்வகையில், ஜூலை - டிசம்பர் மாதங்களுக்கு அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் லட்சக்கணக்கான தமிழ்நாடு அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

அகவிலைப்படி என்பது பணவீக்கத்தையும், விலைவாசி உயர்வையும் சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்