அரசு வேலை, நுழைவுத் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கு மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து கற்கின்றனர். அவர்களிடம் ஜிஎஸ்டியாக 18 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களும் பயிற்சி வகுப்புகளும் பாதிக்கப்படுவதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக முறையிடப்பட்டு வந்தது. சென்ற ஆண்டின் இறுதியில் பல்வேறு பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பயிற்சி மையங்களில் உள்ள 18 சதவீத ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் அல்லது மிகக் குறைந்த வரியை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் இதற்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 லட்சம் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை எழுதுகிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதாகவும், இதற்கான ஜிஎஸ்டி வரியைக் குறைத்தால் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பயன்பெறுவார்கள் எனவும் முறையிடப்பட்டது. இந்நிலையில் பயிற்சி வகுப்புகளுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாகவே நீடிக்கும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பரோட்டாவுக்கு 18 சதவீத வரி: எழுந்தது புதிய சர்ச்சை!
ஆந்திரப் பிரதேச மாநிலப் பிரிவு அட்வான்ஸ் ரூலிங் வாரியம் (Authority for Advance Rulings) முன்பு விசாரணைக்கு வந்த இந்த முறையீட்டில், பயிற்சி வகுப்புகளுக்கான சேவை ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட மாட்டாது எனவும், 18 சதவீத வரி நீடிக்கும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாஸ்டர் மைண்ட்ஸ் என்ற பயிற்சி நிறுவனத்தால் தொடரப்பட்ட இந்த வழக்கில் பயிற்சி வகுப்புகள் பிரதானமாக கல்விச் சேவையில் சேராது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு உணவு உள்ளிட்ட சேவைகளை வழங்கினால் அதற்கும் ஜிஎஸ்டி விலக்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலம் அட்வான்ஸ் ரூலிங் வாரியம் முன்பு வந்த வழக்கிலும், 18 சதவீத ஜிஎஸ்டி நீடிக்கும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 லட்சம் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை எழுதுகிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதாகவும், இதற்கான ஜிஎஸ்டி வரியைக் குறைத்தால் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பயன்பெறுவார்கள் எனவும் முறையிடப்பட்டது. இந்நிலையில் பயிற்சி வகுப்புகளுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாகவே நீடிக்கும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பரோட்டாவுக்கு 18 சதவீத வரி: எழுந்தது புதிய சர்ச்சை!
ஆந்திரப் பிரதேச மாநிலப் பிரிவு அட்வான்ஸ் ரூலிங் வாரியம் (Authority for Advance Rulings) முன்பு விசாரணைக்கு வந்த இந்த முறையீட்டில், பயிற்சி வகுப்புகளுக்கான சேவை ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட மாட்டாது எனவும், 18 சதவீத வரி நீடிக்கும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாஸ்டர் மைண்ட்ஸ் என்ற பயிற்சி நிறுவனத்தால் தொடரப்பட்ட இந்த வழக்கில் பயிற்சி வகுப்புகள் பிரதானமாக கல்விச் சேவையில் சேராது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு உணவு உள்ளிட்ட சேவைகளை வழங்கினால் அதற்கும் ஜிஎஸ்டி விலக்கு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலம் அட்வான்ஸ் ரூலிங் வாரியம் முன்பு வந்த வழக்கிலும், 18 சதவீத ஜிஎஸ்டி நீடிக்கும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.