கடந்த ஜூலை மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதி 11% சரிவடைந்து, ஒரு கோடியே 80 லட்சம் டன்னாக உள்ளதென்று, தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அளவில், பல்வேறு தேவைகளுக்காக, நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதில், கோல் இந்தியா நிறுவனம் நாட்டின் தேவையில் 80% வரை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து, விநியோகித்து வருகிறது. எஞ்சிய 20 முதல் 30% வரையான நிலக்கரி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இதன்படி, 2016ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் நிலக்கரி இறக்குமதி ஒரு கோடியே 80 லட்சம் டன்னாக உள்ளதென்று, செயில், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இது, முந்தைய 2015ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் இருந்த 2 கோடியே 2 லட்சம் டன் நிலக்கரியை விட 11% சரிவாகும்.
தற்போதைய நிலையில், கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்திப் பணிகள் எதிர்பார்த்தபடி உள்ளன. இதனால், நாட்டின் பெருமளவு தேவையை கோல் இந்தியா நிறுவனம் பூர்த்தி செய்துவருகிறது. எனவே, நிலக்கரி இறக்குமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்திய அளவில், பல்வேறு தேவைகளுக்காக, நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதில், கோல் இந்தியா நிறுவனம் நாட்டின் தேவையில் 80% வரை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து, விநியோகித்து வருகிறது. எஞ்சிய 20 முதல் 30% வரையான நிலக்கரி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இதன்படி, 2016ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் நிலக்கரி இறக்குமதி ஒரு கோடியே 80 லட்சம் டன்னாக உள்ளதென்று, செயில், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இது, முந்தைய 2015ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் இருந்த 2 கோடியே 2 லட்சம் டன் நிலக்கரியை விட 11% சரிவாகும்.
தற்போதைய நிலையில், கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்திப் பணிகள் எதிர்பார்த்தபடி உள்ளன. இதனால், நாட்டின் பெருமளவு தேவையை கோல் இந்தியா நிறுவனம் பூர்த்தி செய்துவருகிறது. எனவே, நிலக்கரி இறக்குமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.