ஆப்நகரம்

தேங்காய் பருப்பு ஏலம் அமோகம்.. ஒரே நாளில் 7500 கிலோவிற்குமேல் விற்பனை!

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை விற்பனைக் கூடத்தில் 5 இலட்சத்து 66 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்.

Samayam Tamil 10 Feb 2023, 5:15 pm
ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அவ்வப்போது தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகள், அண்டை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் பங்கேற்று வர்த்தகம் செய்வார்கள்.
Samayam Tamil Erode Coconut lentil sale


ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கொடுமுடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அவ்வப்போது தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில் இன்று ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு 165 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 80 ரூபாய் 19 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதே ஒரு கிலோ முதல் தரம் தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக 82 ரூபாய் 60 காசுக்கும், சராசரி விலையாக 82 ரூபாய் 10 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 52 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 77 ரூபாய் 89 காசுக்கும், சராசரி விலையாக 67 ரூபாய் 99 காசுக்கு ஏலம் போனது.

இன்று சந்தையில் மொத்தமாக 7,386 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 5 இலட்சத்து 66 ஆயிரத்து 558 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூட்டத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்