ஆப்நகரம்

350 பேரை வேலையை விட்டுத் தூக்கும் காக்னிசண்ட்!

செலவைக் குறைக்கும் நோக்கத்தில் சுமார் 350 பணியாளர்களை வேலையை விட்டு நீக்க கக்னிசண்ட் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

Samayam Tamil 23 Dec 2019, 7:48 pm
அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான காக்னிசண்ட், இந்தியாவிலும் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. சர்வதேச அளவில் ஐடி துறையில் மந்தநிலை நீடிக்கும் நிலையில், அதன் தாக்கம் காக்னிசண்ட் நிறுவனத்திலும் தீவிரமடைந்துள்ளது. அதனால் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் காக்னிசண்ட் ஈடுபட்டுள்ளது. ரூ.80 லட்சம் முதல் ரூ.1.2 கோடி வரையில் சம்பளம் வாங்கும் சீனியர் லெவல் ஊழியர்களில் 350 பேர் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.
Samayam Tamil 350 பேரை வேலையை விட்டுத் தூக்கும் காக்னிசண்ட்


இந்தப் பணிநீக்க நடவடிக்கையால் இந்தியர்கள் அதிகமாகப் பாதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 முதல் 55 வயதுடைய பணியாளர்களின் வேலை பறிபோகவுள்ளது. இத்தகவலை காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான கரென் மெக்லாலின் உறுதிசெய்துள்ளார். செலவைக் குறைக்க இன்னும் சில நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உதான் திட்டம்: விமானத்தில் பறந்த 35 லட்சம் பேர்!

காக்னிசண்ட் நிறுவனத்தில் மொத்தம் 2,60,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், இந்தியாவில் 1,80,000 பேரும், வட அமெரிக்காவில் 50,400 பேரும், ஐரோப்பாவில் 13,800 பேரும், இதர நாடுகளில் 1,95,800 பேரும் பணியாற்றுகின்றனர். கடந்த காலங்களில் காக்னிசண்ட் நிறுவனம் இந்தியர்கள் பலரைப் பணிநீக்கம் செய்திருக்கிறது. இருப்பினும் இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் காக்னிசண்ட் நிறுவனம் 5,798 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த ஆண்டில் வேலைவாய்ப்புகளை அதிகரித்துள்ளதால் இந்திய ஐடி துறை இயல்பு நிலைக்குத் திரும்புவதாகத் தெரிகிறது.

சுவிஸ் வங்கியில் இந்தியப் பணம்: மறைக்கும் மத்திய அரசு!

கடந்த மாதம் காக்னிசண்ட் வெளியிட்டிருந்த அறிக்கையில், உலகம் முழுவதும் 16,000 பேரை வேலையை விட்டுத் தூக்கப்போவதாகக் கூறியிருந்தது. கண்டெண்ட் மாடரேசன் தொழில் பிரிவில் 6,000 பேரை வேலையை விட்டு நீக்கத் திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வீடியோ உள்ளிட்ட கண்டெண்ட் மாடரேசன் பிரிவிலும் காக்னிசண்ட் பணியாற்றி வருகிறது. காக்னிசண்ட் நிறுவனத்தின் இந்த முடிவால் இந்தியாவில் ஹைதராபாத் காக்னிசண்ட் நிறுவனத்தில் உள்ள சுமார் 500 பேரின் வேலை பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்