ஆப்நகரம்

மூடப்பட்ட பங்குச் சந்தை.. பொருளாதார நெருக்கடியால் கலங்கும் இலங்கை!

அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர் அனைவரும் ராஜினாமா செய்ததால் இலங்கை பங்குச் சந்தை வீழ்ச்சி.

Samayam Tamil 4 Apr 2022, 1:34 pm
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று இலங்கை அமைச்சர்கள் மொத்தமாக கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
Samayam Tamil colombo stock exchange


இலங்கை அமைச்சர்கள அனைவரும் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இலங்கை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று நிறுத்திவைக்கப்பட்டது. அமைச்சர்கள் மொத்தமாக ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இன்று பங்குச் சந்தை தொடங்கியதும் 5.92% சரிந்தது.

இதைத் தொடர்ந்து பங்கு வர்த்தகம் அரை மணி நேரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டதாக இலங்கை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் ராஜினாமா மட்டுமல்லாமல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் ராஜினாமா செய்ததும் பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கர்நாடகா டூ தமிழகம்.. தாவும் நிறுவனங்கள்.. ரகசியம் உடைத்த பிடிஆர்
இலங்கை அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் தானும் ராஜினாமா செய்வதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்த் கப்ரால் அறிவித்தார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், “கேபினட் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ள சூழலில் நான் எனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் சமர்ப்பித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர் என அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்ததால் பங்குச் சந்தை கடகடவென சரிந்தது. இதையடுத்து பங்கு வர்த்தகம் அரை மணி நேரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டது.

இலங்கை சந்திக்கும் நெருக்கடியை சரிசெய்ய அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். தேசத்தின் தேவை கருதியும், அனைத்து குடிமக்களுக்காகவும், எதிர்கால தலைமுறையினருக்காகவும் அனைத்து கட்சிகளும் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்