பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 22.36% உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பிப்ரவரியில் இந்தியாவின் ஏற்றுமதி 33.81 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பொறியியல், பெட்ரோலியம், ரசாயனம் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி பெரிதளவில் உயர்ந்துள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரிகிறது. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 21.19 பில்லியன் டாலராக உயர்ந்துள்ள போதிலும் ஏற்றுமதி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் 55 பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகள் இறக்குமதியாகியுள்ளன. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வர்த்தகப் பற்றாக்குறை 13.12 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2021 ஏப்ரல் மாதம் முதல் 2022 பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 374.05 பில்லியன் டாலராக இருந்துள்ளது. இது 45.80% உயர்வாகும். இதே 11 மாதகாலத்தில் இறக்குமதி 550.12 பில்லியன் டாலராக இருந்துள்ளது. இது 59.21% உயர்வாகும்.
பொறியியல், பெட்ரோலியம், ரசாயனம் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி பெரிதளவில் உயர்ந்துள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரிகிறது. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 21.19 பில்லியன் டாலராக உயர்ந்துள்ள போதிலும் ஏற்றுமதி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் 55 பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகள் இறக்குமதியாகியுள்ளன. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வர்த்தகப் பற்றாக்குறை 13.12 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2021 ஏப்ரல் மாதம் முதல் 2022 பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 374.05 பில்லியன் டாலராக இருந்துள்ளது. இது 45.80% உயர்வாகும். இதே 11 மாதகாலத்தில் இறக்குமதி 550.12 பில்லியன் டாலராக இருந்துள்ளது. இது 59.21% உயர்வாகும்.