ஆப்நகரம்

பெண்களுக்கான பிஎஃப் கணக்கு.. முக்கிய அறிவிப்பு!

பெண்களுக்கான பிஎஃப் கணக்குகள் அனைத்தும் இ-நாமினேசன் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Mar 2022, 1:21 pm
இன்று சர்வதேச பெண்கள் தினம். இன்றைய நாளில் பெண்களுக்கு சில சலுகைகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சார்பாக, சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைத்து பெண் ஊழியர்களும் தங்களது பிஎஃப் கணக்கில் நாமினியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், அதற்கு நிறுவனங்களுக்கு சலுகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.
Samayam Tamil women


பிஎஃப் அமைப்புடன் தொடர்புடைய நிறுவனங்கள் அனைத்தும் இந்த நாளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து இ-நாமினேசனை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து பிஎஃப் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்திலும் தகவல் வெளியிட்டுள்ளது. பிஎஃப் கணக்கில் கடைசியாக சேர்க்கப்பட்ட நாமினி பெயர்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும், இதற்கு முன்னர் இருந்த பெயர் நீக்கப்படும் எனவும் பிஎஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.


பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும், 2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் தங்களது கணக்கில் ஒரு நாமினியை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டது. பிஎஃப் உறுப்பினர் ஒருவேளை திடீரென இறந்துவிட்டால் அவரது நாமினிக்குத்தான் பிஎஃப் பலன்கள் கிடைக்கும். எனவே நாமினியை தேர்வுசெய்வது கட்டாயமாகும். ஏற்கெனவே நாமினியைத் தேர்வுசெய்தவர்களும் அதை அப்டேட் செய்யலாம். பிஎம் அமைப்பின் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற வெப்சைட்டில் சென்று நாமினியை சுலபமாக அப்டேட் செய்யலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்