ஜிஎஸ்டிக்குப் பின்னர் பொருட்களின் மீது புதிய எம்ஆர்பி விலையை ஒட்டாவிட்டால் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறுகையில், '' விற்கப்படாமல் இருக்கும் சரக்குகளை தயாரிப்பாளர்கள் வரும் செப்டம்பர் வரை புதிய எம்ஆர்பி விலையில் விற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். ஜிஎஸ்டி குறைகளை நிவர்த்தி செய்ய அமைச்சரவையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உதவிக்கான தொலைபேசி எண்கள் 14ல் இருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 700 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு நிதித்துறை மற்றும் சிறந்த வல்லுநர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த துவக்கத்தில் சில குறைபாடுகள், சந்தேகங்கள் இருக்கத்தான் செய்யும். இதை நிவர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். ஜிஎஸ்டி அமலுக்குப் பின்னர் சில பொருட்களின் விலை ஏறியுள்ளது. சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. விற்கப்படாத பொருட்களின் மீது புதிய எம்ஆர்பி விலைக்கான ஸ்டிக்கரை ஒட்டிதான் விற்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் முறை கண்டறியும் குற்றத்திற்கு ரூ. 25,000, 2 ஆம் முறை குற்றம் கண்டறிந்தால் ரூ. 50,000, 3ஆம் முறை குற்றம் கண்டறிந்தால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்'' என்றார்.
புதிய விலைப்பட்டியல் விவரங்களை அமைச்சகத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், விளம்பரப்படுத்த வேண்டும் என்ற தகவலையும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Consumer Affairs Minister Ram Vilas Paswan on Friday warned of a fine of up to Rs 1 lakh, including a jail term, if new, post-GST rates are not printed on the inventory in the interest of consumers.
இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறுகையில், '' விற்கப்படாமல் இருக்கும் சரக்குகளை தயாரிப்பாளர்கள் வரும் செப்டம்பர் வரை புதிய எம்ஆர்பி விலையில் விற்றுக் கொள்ள அனுமதிக்க வேண்டும். ஜிஎஸ்டி குறைகளை நிவர்த்தி செய்ய அமைச்சரவையின் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உதவிக்கான தொலைபேசி எண்கள் 14ல் இருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 700 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு நிதித்துறை மற்றும் சிறந்த வல்லுநர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த துவக்கத்தில் சில குறைபாடுகள், சந்தேகங்கள் இருக்கத்தான் செய்யும். இதை நிவர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். ஜிஎஸ்டி அமலுக்குப் பின்னர் சில பொருட்களின் விலை ஏறியுள்ளது. சில பொருட்களின் விலை குறைந்துள்ளது. விற்கப்படாத பொருட்களின் மீது புதிய எம்ஆர்பி விலைக்கான ஸ்டிக்கரை ஒட்டிதான் விற்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் முறை கண்டறியும் குற்றத்திற்கு ரூ. 25,000, 2 ஆம் முறை குற்றம் கண்டறிந்தால் ரூ. 50,000, 3ஆம் முறை குற்றம் கண்டறிந்தால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்'' என்றார்.
புதிய விலைப்பட்டியல் விவரங்களை அமைச்சகத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், விளம்பரப்படுத்த வேண்டும் என்ற தகவலையும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Consumer Affairs Minister Ram Vilas Paswan on Friday warned of a fine of up to Rs 1 lakh, including a jail term, if new, post-GST rates are not printed on the inventory in the interest of consumers.