ஆப்நகரம்

வழி மேல் விழி வைத்து... காத்துக் கிடக்கும் நிறுவனங்கள்!

புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அழைத்துவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

Samayam Tamil 7 Jul 2020, 5:14 pm
இந்தியாவில் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. வேலைக்காக வெளியூர் சென்று வேலைபார்த்து வந்த லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கே திரும்பினர். போக்குவரத்து வசதி இல்லாத நிலையிலும் கால்நடையாகவே தங்களது சொந்த ஊர்களை அடைந்தனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. ஆனாலும் தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை நீடிக்கிறது.
Samayam Tamil migrants


தொழில் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது புலம்பெயர் தொழிலாளர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. திரும்பி வரும் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட ஏற்பாடுகள் நிறுவனம் சார்பாகவே ஏற்பாடு செய்யப்படும் என்று பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அவர்கள் வேலைக்கு வந்தாலே போதும் என்ற நிலையில் அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துதர நிறுவனங்கள் முன்வந்துள்ளன. உணவு, தங்குமிடம், போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்படும் என்று லின்ஃபோக்ஸ் லாஜிஸ்டிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாளரான வி.வி.பேனுகோபால் கூறியுள்ளார்.

கொரோனாவிலிருந்து தப்பித்த கார் நிறுவனங்கள்!

இதுபோலவே பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அழைத்து வரும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்திலேயே பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்குத் திரும்பவிடாமல் அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யத் தொடங்கின. ஆனால் கொரோனா பீதியால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடையைக் கட்டினர். திரும்பி வந்தால் மீண்டும் கொரோனா பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் வேறு வழியில்லாமல் தங்களது சொந்த ஊர்களிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

ஜூம் செயலியை தூக்கி எறிந்த வர்த்தகர்கள் சங்கம்!

அதன் விளைவாகவே தற்போது தொழில் நிறுவனங்கள் போதிய ஊழியர்கள் இல்லாமல் தத்தளிக்கின்றன. நான்கு மாதங்களுக்குப் பிறகு உற்பத்தியைப் பெருக்கி வருவாயை மேம்படுத்தும் முயற்சியில் தற்போது தொழிலாளர் பற்றாக்குறை என்பது கொரோனாவையும் தாண்டிய பிரச்சினையாக இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்