ஆப்நகரம்

Bank Holidays: அக்டோபர் மாதத்தில் இத்தனை நாள் விடுமுறையா?

தமிழகத்தில் எத்தனை நாள் விடுமுறை?

Samayam Tamil 30 Sep 2020, 12:23 pm
வருகிற அக்டோபர் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது, எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்கும் என்ற முழு விவரம் இதோ...
Samayam Tamil complete list of bank holidays in tamil nadu and across india for october 2020 month
Bank Holidays: அக்டோபர் மாதத்தில் இத்தனை நாள் விடுமுறையா?


இன்றியமையாத வங்கிகள்!

வங்கிகள் நமது பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கியமான இடமாகும். வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன் பெறவும் மற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் நம் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நம்முடைய பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி செயல்பட்டால் தேவையற்ற அலைச்சலையும் நேர விரயத்தையும் தவிர்க்கலாம். எனவே வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்துகொள்வது சிறந்தது. நாளை தொடங்கும் அக்டோபர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்கும், இயங்காது என்று பார்க்கலாம் வாருங்கள்.

சனி - ஞாயிறு விடுமுறை!

பொதுத் துறை, தனியார், கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் எப்போதும்போல அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் விடுமுறைதான். அந்த வகையில், அக்டோபர் 4, 11, 18, 25 ஆகிய நான்கு நாட்களும் நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி, அக்டோபர் 10ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமையும், அக்டோபர் 24ஆம் தேதி நான்காவது சனிக்கிழமையும் வங்கிகள் இயங்காது.

பொதுவான விடுமுறைகள்!

அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை. அக்டோபர் 26 விஜய தசமியை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிலாடி நபியை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கும் மேற்கூறிய மூன்று நாட்களில்தான் பொதுவான விடுமுறை வருகிறது.

மற்ற விடுமுறைகள்!

அக்டோபர் 8, 23 ஆகிய நாட்களில் உள்ளூர் பண்டிகையை முன்னிட்டு ஒரு சில மாநிலங்களில் வங்கிகளுக்குப் பிராந்திய விடுமுறை. அக்டோபர் 17ஆம் தேதி கட்டி பிகு தினத்தை முன்னிட்டு அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மிலாடி ஷெரிஃப் தினத்தை முன்னிட்டு கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் இயங்காது. அக்டோபர் 31ஆம் தேதி மகரிஷி வால்மிகி ஜெயந்தி, லக்‌ஷ்மி பூஜை போன்ற தினங்களை முன்னிட்டு ஒடிசா, திரிபுரா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள வங்கிகள் இயங்காது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்