ஆப்நகரம்

ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. நிறுவனங்கள் எடுக்கும் சூப்பர் முடிவு!

இந்திய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 30 Jan 2022, 12:35 pm
இந்தியாவில் எல்லா துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கும் விரைவில் சம்பள உயர்வு கிடைக்க இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்தபின் சில துறைகள் தாறுமாறான வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், இதனால் ஊழியர்கள் பயனடையவுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
Samayam Tamil cash


Conferry India நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இந்திய நிறுவனங்களின் நிதி நிலை வலுவாக முன்னேறியுள்ளது இதற்கு ஒரு முக்கிய காரணம்.

குறிப்பாக, கொரோனா தொடங்கியபின் நுகர்வோர் நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதனால் தொழில் நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. லாபத்தில் ஒரு பகுதியை சம்பள உயர்வுக்கு ஒதுக்க ஏராளமான இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

செலவே இல்லாமல் மீன் வளர்ப்பு தொழில்.. அரசின் அடடே திட்டம்!
இதுமட்டுமல்லாமல், வீட்டில் இருந்தே வேலை செய்யும் ஊழியர்களுக்கு அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் படித் தொகை வழங்கவும் பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதிலும், ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் அதிகபட்சமாக பலனடைவார்கள் என இந்த ரிப்போர்ட் கூறுகிறது.

துறை ரீதியாக பார்த்தால் ஐடி ஊழியர்களுக்கு 10.5%, நுகர்வோர் துறை ஊழியர்களுக்கு 10.1%, லைஃப் சயின்சஸ் துறை ஊழியர்களுக்கு 9.5%, வாகனம் மற்றும் ரசாயனத் துறை ஊழியர்களுக்கு 9% சம்பள உயர்வு கிடைக்கும் என இந்த ரிப்போர்ட் கூறுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்