ஆப்நகரம்

பணம் வேணும்னா இதைப் பண்ணுங்க.. விவசாயிகளுக்கு தமிழக அரசு உத்தரவு!

விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண்ணை அப்டேட் செய்யும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 10 Aug 2022, 5:10 pm
தமிழ்நாட்டில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) திட்டம் மத்திய அரசின் 100 சதவீதப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil pm kisan


பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 38.24 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11 தவணைகளாக நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்து 12ஆவது தவணைப் பணம் வரவிருக்கும் நிலையில் அதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளியின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, பிஎம் கிசான் திட்டப் பயனாளிகள் அனைவரும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரைப் பதிவிட்டு ஆதார் எண்ணை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்ய முடியாதவர்கள் அருகிலுள்ள பொதுச் சேவை மையங்களில் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்தும் ஆதார் எண்ணை அப்டேட் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு 2000 ரூபாய் தரும் திட்டம்.. மத்திய அரசின் முக்கிய அப்டேட்!
பிஎம் கிசான் வெப்சைட்டில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே 12ஆவது தவணைத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எனவே, இதுவரை ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகள் அனைவரும் கட்டாயமாக ஆதார் எண்ணை பி.எம்.கிசான் வலைதளத்தில் புதுப்பித்து தொடர்ந்து பயனடையுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்