ஆப்நகரம்

ஆர்பிஐ சுயாட்சி அதிகாரங்களில் எங்களது தலையீடு இல்லை: அருண் ஜெட்லி

சட்டத்திற்கு உட்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவது அனைத்தும் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் சுயாட்சி அதிகாரத்தில் தலையிடுவது என்று ஆகாது'' என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

TOI Contributor 14 Jan 2017, 6:31 pm
சட்டத்திற்கு உட்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவது அனைத்தும் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் சுயாட்சி அதிகாரத்தில் தலையிடுவது என்று ஆகாது'' என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.
Samayam Tamil consultations mandated by law arent infringement of reserve banks autonomy finance ministry
ஆர்பிஐ சுயாட்சி அதிகாரங்களில் எங்களது தலையீடு இல்லை: அருண் ஜெட்லி


ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் உள் விவகாரங்களில் மத்திய அரசு தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறது என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து இருந்தது. அவ்வாறு தலையிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலுக்கு கடிதமும் எழுதி இருந்தனர். அந்தக் கடிதத்தில், ''கரன்சி செயல்பாடுகளில் ஒத்துழைப்பு நல்குமாறு ஆர்பிஐ தலைமையகத்திற்கு நிதித்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் கடிதம் எழுதி இருந்தார். இது ரிசர்வ் வங்கி விஷயத்தில் அதிகாரிகளின் சட்ட மீறல் செயல்களாகும். ஆர்பிஐயின் கடுமையான உழைப்பு மற்றும் நல்ல செயல்பாடுகள் அனைத்தும் மோசமான செயல்களாக சித்தரித்து காட்டப்படுகிறது. தலையிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.

இதற்கு இன்று விளக்கம் அளித்துள்ள அருண் ஜெட்லி, ''ரிசர்வ் வங்கியின் சுயாட்சி அதிகாரத்தில் நாங்கள் மூக்கை நுழைப்பது இல்லை. சட்டத்திற்கு உட்பட்ட ஆலோசனைகள் வழங்கி செயல்படுவது அவர்களது அதிகாரத்தில் மூக்கை நுழைப்பது ஆகாது'' என்று தெரிவித்துள்ளார்.

The Finance Ministry today responded to media reports on the government's alleged infringement of the Reserve Bank's autonomy, saying consultations mandated by law or evolved by practice shouldn't be considered to be infringement of the central bank's independence.

அடுத்த செய்தி

டிரெண்டிங்