ஆப்நகரம்

உள்கட்டுமானத் துறை மாபெரும் வீழ்ச்சி!

ஏப்ரல் மாதத்தில் உள்கட்டுமானத் துறை 38 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 30 May 2020, 3:06 pm
கடந்த இரண்டு மாதங்களாகவே இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில் தொழில் துறை உற்பத்தி முற்றிலும் முடங்கிவிட்டது. ஏப்ரல் மாத இறுதியில் தொழில் நடவடிக்கைகளுக்கு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஏப்ரல் மாதத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய துறைகளின் வளர்ச்சி மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
Samayam Tamil infra


மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முந்தைய மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் உள்கட்டுமானத் துறை 38.1 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு, உரம், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு துறைகளும் 9 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தன. நடப்பு மே மாதத்திலும் இத்துறைகளின் வீழ்ச்சி இன்னும் மோசமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

நிதிப் பற்றாக்குறையில் தத்தளிக்கும் இந்தியா!

உள்கட்டுமானத் துறைகளில், சிமெண்ட் உற்பத்தி 86 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. 2019 ஏப்ரல் மாதத்தில் இதன் வளர்ச்சி 2.3 சதவிகிதமாக இருந்தது. சுத்திகரிப்பு உற்பத்தி 24.2 சதவீதமும், மின்சார உற்பத்தி 22.8 சதவிகிதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 19.9 சதவிகிதமும், நிலக்கரி உற்பத்தி 15.5 சதவிகிதமும், கச்சா எண்ணெய் உற்பத்தி 6.4 சதவிகிதமும், உரம் உற்பத்தி 4.5 சதவிகிதமும் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது. சென்ற ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.1 சதவீதமாக இருந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பொருளாதார வீழ்ச்சி இன்னும் மோசமாக இருக்கும் என்று ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்