ஆப்நகரம்

வட்டிக்கு குட்பை: கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்!

மத்திய அரசின் அறிவிப்பில் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு என்ன பயன் என்பதை பற்றி பார்க்கலாம்.

Samayam Tamil 25 Oct 2020, 4:36 pm
கொரோனாவால் வதைக்கப்பட்டு பண நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான கடன்களுக்கு வட்டி மீதான வட்டியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு இச்சலுகை பொருந்தும்.
Samayam Tamil Credit Card


மொராடோரியம் பயன்படுத்தியிருந்தாலும், பயன்படுத்தாமல் கடன்களை சரிவர செலுத்தியிருந்தாலும் இந்த வட்டி தள்ளுபடி பொருந்தும். இதற்காக மத்திய அரசு 6500 கோடி ரூபாய் செலவு செய்யவிருப்பதாக தகவல் வெளீயாகியுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மார்ச் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையிலான வட்டி மீது விதிக்கப்பட்ட வட்டி தள்ளுபடி செய்யப்படும். இதில் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான வட்டியும் அடங்கும்.

இளம் வயதில் முதலீடு செய்ய இதுதான் சிறந்த சாய்ஸ்!

குறிப்பிட்ட காலத்திற்கான எளிய வட்டி மற்றும் கூட்டு வட்டிக்கு இடையேயான வித்தியாசத்தை வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியோருக்கு திருப்பிச் செலுத்திவிட வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் கல்விக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், பெர்சனல் லோன் உள்ளிட்டவற்றோடு கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையும் சேர்க்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டை பொறுத்தவரை, மார்ச் முதல் ஆகஸ்ட் வரை தவணை முறையில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு Weighted Average Lending Rate (சராசரி வட்டி விகிதம்) அடிப்படையில் வட்டி விதிக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு நிறுவனத்தின் ஆடிட்டரால்தான் இந்த சராசரி வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு சான்றளிக்கப்படும். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பல்வேறு விகிதங்களில் வட்டி விதிப்பதால், ஒரே வட்டி முறை கிடையாது. எனவே, சராசரி வட்டி விகித முறை பயன்படுத்தப்பட வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்