ஆப்நகரம்

கலக்கத்தில் வாகன ஓட்டிகள்.. மீண்டும் ஆட்டம் காட்டும் கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கம்.

Samayam Tamil 21 Mar 2022, 1:03 pm
உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இன்று கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையே பிப்ரவரி 24ஆம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
Samayam Tamil crude oil


உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே, கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து சில தினங்களுக்கு முன் பேரலுக்கு 130 டாலரை தொட்டது. இதனால் உலகம் முழுவதும் பணவீக்கமும் அதிகரித்தது.

எனினும், ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதால் பதற்றம் தணிந்து கச்சா எண்ணெய் விலையும் குறைந்தது. ஆனால், தற்போது உக்ரைன் - ரஷ்யா இடையே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

டீசல் விலை உயர்வு.. வெளியான பரபரப்புத் தகவல்!
இதன்படி இன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.96 டாலர் உயர்ந்துள்ளது. அதாவது கச்சா எண்ணெய் விலை 1.8% உயர்ந்துள்ளது. உக்ரைனில் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய படைகள் முற்றுகையிட்டுள்ளன. எந்தவொரு சூழலிலும் உக்ரைனிய படைகள் சரணடையமாட்டார்கள் என உக்ரைன் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனால், உக்ரைன் - ரஷ்யா இடையே பதற்றம் தணியவில்லை என்பது தெளிவாகியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மறுபுறம், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அழுத்தம் அதிகரித்துள்ளது.

ஆனால், எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கோரிக்கைகளை சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் நிராகரித்துவிட்டன. மறுபுறம், ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்திய நிறுவனங்கள் ஆர்டர் கொடுத்துள்ளன.

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்தால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயருமோ என்ற அச்சம் வாகன ஓட்டிகள் மத்தியில் உருவாகியுள்ளது. ஏற்கெனவே பல்க் டீசல் ஆர்டர்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்