ஆப்நகரம்

கச்சா எண்ணெய் உற்பத்தியைக் கெடுத்த கொரோனா!

கொரோனா பாதிப்பால் ஏப்ரல் மாதத்துக்கான இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 6.35 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 23 May 2020, 9:08 pm
இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா பாதிப்புகள் தீவிரமாக உள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதி முதலே இந்தியாவின் உற்பத்தித் துறை முற்றிலும் முடங்கிவிட்டது. ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பிறகு சில தளர்வுள் அறிவிக்கப்பட்ட பின்னர் உற்பத்தி மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. இன்னும் இயல்பு நிலை திரும்பாத நிலையில் ஏப்ரல் மாதத்துக்கான உள்நாட்டு உற்பத்தி மந்தமாகவே இருந்தது. குறிப்பாக, பெட்ரோலியப் பொருட்களுக்கான உற்பத்தியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil crude oil


ஏப்ரல் மாதத்துக்கான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தி குறித்த விவரங்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்ற ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 2545.81 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்துள்ளது. இது மாதாந்திர இலக்கை விட 1.44 சதவீதம் குறைவாகும். அதேபோல, 2019 ஏப்ரல் மாத உற்பத்தியை விட 6.35 சதவீதம் குறைவாகும்.

ஐ ஜாலி... வீட்டுக் கடன் வாங்குறது ஈஸி!

இயற்கை வாயு உற்பத்தியைப் பொறுத்தவரையில், சென்ற ஏப்ரல் மாதத்தில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2161.33 மில்லியன் மெட்ரிக் கன மீட்டராக இருந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்துக்கான உற்பத்தி இலக்கை விட 10.88 சதவீதம் குறைவாகும். அதேபோல, 2019 ஏப்ரல் மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 18.62 சதவீதம் குறைவாகும்.

வசமாகச் சிக்கிய அம்பானி... இங்கிலாந்து நீதிமன்றத்தில் தீர்ப்பு!

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு உற்பத்தியைப் பொறுத்தவரையில், சென்ற ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு உற்பத்தி 14745.18 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்துள்ளது. இது மாதாந்திர இலக்கை விட 22.01 சதவீதமும், 2019 ஏப்ரல் மாத உற்பத்தியை விட 28.78 சதவீதமும் குறைவாகும். மே மாதத்திலும் இதே மந்தநிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்