ஆப்நகரம்

பேங்குக்கே போக வேண்டாம்.. வீட்டில் இருந்தே வேலையை முடிக்கலாம்!

பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்கள் இந்த நம்பர்களைப் பயன்படுத்தி வங்கிச் சேவைகளைப் பெறலாம்.

Samayam Tamil 18 Apr 2022, 10:40 am
முன்பெல்லாம் பணம் எடுப்பதற்கும் பணம் போடுவதற்கும் காசோலை பரிவர்த்தனைகளுக்கும் வங்கிக் கிளையில் மணக் கணக்கில் காத்துக்கிடக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அதுபோன்ற பிரச்சினைகளே இல்லை. வீட்டில் இருந்தபடியே பல்வேறு வகையான வங்கிச் சேவைகளை நீங்கள் பெறமுடியும். கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளிலேயே இப்போது ஆன்லைன் வங்கிச் சேவைகள் வந்துவிட்டன.
Samayam Tamil bank


இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் பேங்க், தனது வாடிக்கையாளர்களுக்காக நிறைய வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் கஸ்டமர் கேர் நம்பர். வாடிக்கையாளர்களுக்கு மூன்று கஸ்டமர் கேர் நம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்பு கொண்டு பல்வேறு வகையான வங்கிச் சேவைகளை வீட்டில் அமர்ந்தபடியே நீங்கள் பெறமுடியும்.

1800-103-2222
1800-180-2222
0120-249-0000

இந்த நம்பர்களைத் தொடர்பு கொண்டு கேள்வி பதில் மூலமாக வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே வங்கிச் சேவைகளைப் பெறலாம். வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது, கடைசி 5 பரிவர்த்தனைகள், டெபிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது, டெபிட் கார்டை பிளாக் செய்வது. காசோலை நிலவரம் போன்ற பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். அதேபோல, UPI தொடர்பான கேள்விகளுக்கும் இதில் பதில் கிடைக்கும்.

நாளை முதல் நேரம் மாற்றம்.. ரிசர்வ் வங்கி அளித்த அதிர்ச்சி தகவல்;
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் மொபைல் ஆப் மூலமாகவே நிறைய வங்கிச் சேவைகளைப் பெறுகின்றனர். இருந்தாலும் வாடிக்கையாளர்கள் பலருக்கு இந்த கஸ்டமர் கேர் நம்பர் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இச்சேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற வங்கிகளிலும் இதுபோன்ற கஸ்டமர் கேர் நம்பர் சேவை உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்