ஆப்நகரம்

வீட்டிலிருந்தபடி வேலையா? அப்போ இத படிங்க!

மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களிலிருந்து லேப்டாப்களை எடுத்துசெல்ல ஆன்லைனிலேயே அனுமதி பெறலாம் என்று சுங்கத் துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 27 Mar 2020, 4:05 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் ஏப்ரல் 15ஆம் தேதி வரையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
Samayam Tamil வீட்டிலிருந்தபடி வேலையா அப்போ இத படிங்க


இதன் விளைவாக பல நிறுவனங்கள், முக்கியமாக தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலேயே இருந்தபடி வேலை செய்ய அனுமதித்துள்ளன. பல தனியார் நிறுவனங்கள் தங்களது அலுவலக வளாகத்திலிருந்து லேப்டாப்களையும் டெஸ்க்டாப்களையும் எடுத்துச் செல்ல ஊழியர்களுக்கு அனுமதித்துள்ளனர்.

ஆனால், பல நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கி வருகின்றன. இப்பகுதியிலிருந்து லேப்டாப்கள், டெஸ்க்டாப்களை எடுத்துச்செல்ல சுங்கத் துறையின் அனுமதி தேவை. இதனால் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதில் தடை ஏற்பட்டது. இதனால் இப்பிரச்சினை குறித்து தொழில்துறை சார்ந்தவர்கள் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மத்திய நேரடி வரிகள் வாரியமும், சுங்கத் துறையும் இணைந்து தேசிய மென்பொருள் மற்று சேவை நிறுவனங்களின் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தின. இதேபோல இதர தொழில்துறையை சேர்ந்த அமைப்புகளும் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தின. மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களில் பணிபுரியும் ஊழியர்கள் நிறுவனத்திற்கு வெளியே வேலைபார்ப்பதற்கு வெளிநாட்டு வர்த்தக கொள்கை (2015-20) அனுமதியளித்துள்ளது.

மேலும், மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவிலிருந்து லேப்டாப், டெஸ்க்டாப் உள்ளிட்ட உபகரணங்களை தற்காலிகமாக எடுத்துச்செல்லவும் இக்கொள்கை அனுமதிக்கிறது. இதற்கு மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவின் அனுமதியும், சுங்கத் துறையின் அனுமதியும் வேண்டும். மென்பொருள் பூங்காவிடம் ஆன்லைனில் அனுமதிபெற்றுவிடலாம். ஆனால், சுங்கத் துறையின் அனுமதி பெற நேரில் செல்ல வேண்டும்.

இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் கீழ் இயங்கும் ஏற்றுமதி மேம்பாட்டு பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவிட்-19 நோயால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், பணிக்குத் தேவையான உபகரணங்களை எடுத்துச் செல்ல சுங்கத் துறையிடம் இமெயில் மூலம் தகவலை தெரிவித்தால் போதும் எனவும், நேரில் வரத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்