ஆப்நகரம்

சுங்க கட்டண வசூலில் புதிய சாதனை.. ஃபாஸ்டாக்குக்கு நன்றி!!

ஃபாஸ்டாக் மூலம் தினசரி சுங்க கட்டண வசூல் ரூ. 193 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 3 May 2023, 12:29 pm
இந்தியாவில் சுங்கச் சாவடிக் கட்டணம் வசூலிப்பதற்கான ஃபாஸ்டாக் முறையை செயல்படுத்தியது சீரான வளர்ச்சிப் பாதையுடன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 2023 ஏப்ரல் 29ஆம் தேதியன்று இதன் மூலம் தினசரி சுங்க வசூல் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது. இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 193.15 கோடியை வசூல் செய்துள்ளது. அந்த ஒரே நாளில் 1.16 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
Samayam Tamil fastag collection


2021 பிப்ரவரி மாதத்தில் இருந்து ஃபாஸ்டாக் முறை கட்டாயமாக்கப்பட்டது. அதிலிருந்து, 339 மாநில சுங்கச் சாவடிகள் உட்பட ஃபாஸ்டாக் திட்டத்தின் கீழ் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 770 லிருந்து 1,228 ஆக அதிகரித்துள்ளது. நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் சுமார் 97 சதவீதம் பேருக்கு ஃபாஸ்டாக் வழங்கப்பட்டுள்ளது.

6.9 கோடிக்கும் அதிகமானோர் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அமைப்பு தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணச் சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது. அனைத்து சாலைப் பயனாளர்களுக்கும் தடையற்ற மற்றும் தொந்தரவில்லாத சுங்கச் சாவடி அனுபவத்தை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது.

சுங்கக் கட்டண வசூலில் ஃபாஸ்டாக், இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 140க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் செயல் திறன் மிக்க சேவையை வழங்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் சுங்கக் கட்டண வசூலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


ஃபாஸ்டாக் கட்டண முறை வந்த பிறகு சுங்கச் சாவடிகளில் சில்லறை பிரச்சினை குறைந்துள்ளது. மிக முக்கியமாக வாகனங்கள் மணிக் கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்க வேண்டிய சிரமம் இப்போது இல்லை.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த ஃபாஸ்டாக் வசதி மூலம் நெடுஞ்சாலையில் பயணம் செய்வது மிகவும் எளிதாகியுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டாக் மூலம் பெரும் லாபமும் ஈட்டி வருகிறது. பொதுமக்களுக்கும் இது வசதியாக இருக்கிறது. விரைவில் ஃபாஸ்டாக் கட்டண முறையில் மாற்றத்தைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. ஜிபிஎஸ் முறையில் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தில் அரசு ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்