ஆப்நகரம்

அரசு ஊழியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு: வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், வீட்டு வாடகைப் படியும் எப்போது உயர்த்தப்படும்?

Samayam Tamil 21 Jan 2022, 10:21 am
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே அகவிலைப்படி 28 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப் படியும் (House Rent Allowance) விரைவில் உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Salary


அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்து வெளியாகி வருகிறது. இதன்படி, இம்மாதமே அகவிலைப்படியை 34% ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பின் வீட்டு வாடகைப் படியும் உயர்த்தப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்கள் வசிக்கும் ஊருக்கு ஏற்ப அவர்களுக்கு 27%, 18%, 9% என வீட்டு வாடகைப் படி தொகை செலுத்தப்படுகிறது.

கம்மி ரேட்டில் வீடு, சொத்து அள்ளிட்டு போங்க.. சூப்பர் வாய்ப்பு!
அகவிலைப்படி உயர்வுக்கு ஏற்றபடி வீட்டு வாடகை படியும் உயர்த்தப்படுகிறது. அதாவது, அகவிலைப்படி 25 விழுக்காட்டை தண்டும்போது வீட்டு வாடகைப் படியும் உயர்த்தப்படும். இவ்வகையில் ஏற்கெனவே வீட்டு வாடகை படியும் உயர்த்தப்பட்டது.

வீட்டு வாடகை படி தொகை அடுத்த கட்டமாக எப்போது உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் எந்த தகவலும் இல்லை. எனினும், அகவிலைப்படி உயர்வு பற்றி தகவல் வந்தபின் வீட்டு வாடகை படியும் உயர்த்தப்படும் என்கின்றனர் அதிகாரிகள் வட்டாரத்தில்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்