ஆப்நகரம்

EMI தொகை மேலும் உயரப்போகுதா? ரிசர்வ் வங்கி முடிவுக்கு காத்திருக்கும் கடனாளிகள்!

இன்று தொடங்கிய ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டம். முடிவுகளுக்கு காத்திருக்கும் கடனாளிகள்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 6 Feb 2023, 10:51 am
ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ள நிலையில், இந்த முறை வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படுமா அல்லது வட்டி விகிதம் மாற்றப்படாமல் நிறுத்திவைக்கப்படுமா என்பது பொதுமக்கள், தொழில்துறையினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil debtors are waiting for rbi mpc meeting policy decisions including repo rate revision as the crucial meet starts today
EMI தொகை மேலும் உயரப்போகுதா? ரிசர்வ் வங்கி முடிவுக்கு காத்திருக்கும் கடனாளிகள்!


ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டம்

ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். இதில், ரெப்போ வட்டி விகிதம் உள்பட ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும்.

ரெப்போ வட்டி

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் தொகைக்கு ரெப்போ வட்டி விதிக்கப்படுகிறது. எனவே, ரெப்போ வட்டி உயர்த்தப்படும்போதெல்லாம் வங்கிகளில் கடன் திருப்பிச் செலுத்துவோருக்கு மாத EMI தொகை உயரும்.

ரெப்போ வட்டி எப்போது உயர்த்தப்படும்?

பணவீக்கம் அதிகரிக்கும்போதெல்லாம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துகிறது.

தற்போதைய ரெப்போ வட்டி

தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக உள்ளது. கடைசியாக டிசம்பர் மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி 6.25% ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கம் குறைவு

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது. நவம்பரில் சில்லறை பணவீக்கம் 5.88% ஆகவும், டிசம்பரில் பணவீக்கம் 5.72% ஆகவும் குறைந்துள்ளது.

வட்டி உயர்வு நிறுத்தம்?

பணவீக்கம் குறைந்துள்ளதால், இன்று தொடங்கியுள்ள ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் வரம்புக்குள் பணவீக்கம் வந்துவிட்டதால் வட்டி விகிதம் உய்ர்த்தப்படாது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

EMI செலுத்துவோருக்கு

மேற்கூறியபடி, ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாமல் விடப்பட்டால், கடனாளிகளுக்கு EMI தொகையில் எந்த மாற்றமும் இருக்காது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்