ஆப்நகரம்

ராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி: மோடியின் இலக்கு!

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவிலிருந்து 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Feb 2020, 8:25 pm
தேசியத் தலைநகர் டெல்லியில் 11ஆவது ராணுவ உபகரணங்கள் ஏற்றுமதிக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவிலிருந்து இன்னும் ஐந்து ஆண்டுகளில் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும், இத்துறையில் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.
Samayam Tamil ராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி_ மோடியின் இலக்கு


இந்தியா போன்றதொரு மிகப் பெரிய நாட்டில் இறக்குமதியை மட்டுமே சார்ந்திருப்பது சரியல்ல எனவும், உள்நாட்டில் உற்பத்தியை அதிகரித்து உள்நாட்டுத் தேவை போக, ஏற்றுமதியிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டார்.



தங்கம் விலை: இன்னைக்கு என்ன நிலவரம் தெரியுமா?

இதுகுறித்து மோடி மேலும் பேசுகையில், “இந்தியாவுக்கும், உலகத்துக்குமான தேவையைப் பூர்த்தி செய்ய மேக் இன் இந்தியா திட்டம் நமது தாரக மந்திரமாக உள்ளது. 2014ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ரூ.2,000 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. அடுத்த இரண்டே ஆண்டுகளில் இந்த மதிப்பை ரூ.17,000 கோடியாக உயர்த்தியுள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்றுமதி மதிப்பை 5 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.35,000 கோடியாகும்” என்றார்.

ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருகிறதா கியா மோட்டார்ஸ்?

மேலும் அவர், “இந்தியாவிலேயே உத்தரப் பிரதேச மாநிலம் மிகப் பெரிய ராணுவத் தளவாட உற்பத்தி மையமாக உருவெடுக்கும். கடந்த காலங்களில் போதிய திட்டங்களும், கொள்கை உருவாக்கமும் இல்லாததால்தான் இறக்குமதியை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையில் இந்தியா இருந்தது. தொழில்நுட்ப அம்சங்களைத் தவறாகப் பயன்படுத்துவது, சைபர் அச்சுறுத்தல்கள், தீவிரவாதம் உள்ளிட்ட சவால்கள் சர்வதேச அளவில் இருக்கின்றன” என்றார் மோடி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்