ஆப்நகரம்

ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களை நெருங்கும் ஆபத்து!

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை முழுவதும் வழங்காவிட்டால் மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Sep 2020, 7:39 pm
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இந்த வரி முறையில் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடுகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாநிலங்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி 14 சதவிகிதத்தை விடக் குறைவாக இருந்தால் மத்திய அரசு அதற்கான இழப்பீட்டை வழங்கும். ஆனால் இந்த இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
Samayam Tamil gst


தற்போதைய கொரோனா நெருக்கடி சமயத்தில் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. கொரோனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி கடவுளின் செயல் எனவும், இப்போதைக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையைத் தர இயலாது எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே கூறிவிட்டார். ஏப்ரல் 1 முதல் தற்போது வரையிலான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனாலும் இழப்பீட்டுத் தொகையை இப்போது வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

லோன் வாங்கப் போறீங்களா... அப்போ இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!

இந்நிலையில், மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாக வழங்காமல் இருந்தால் மாநிலங்களின் செலவுகளில் ரூ.3 லட்சம் கோடி வரையில் குறைபாடு ஏற்படும் என்று இக்ரா நிறுவனம் தனது ஆய்வில் எச்சரித்துள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் தங்களது நலத்திட்ட உதவிகளுக்கு செலவிட முடியாத சூழல் ஏற்படும். இது பொதுமக்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்குப் பதிலாக மாநில அரசுகள் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு வழங்கியுள்ள சலுகையால் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை 4.25 சதவீதம் முதல் 5.52 சதவீதம் வரையில் உயரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்