ஆப்நகரம்

இமயமலை சாமியாருக்கு குட்டு வைத்த கோர்ட்.. சித்ரா வழக்கில் உத்தரவு!

பங்குச் சந்தை ஊழல் வழக்கில் ஆனந்த் சுப்ரமணியனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு.

Samayam Tamil 24 Mar 2022, 4:24 pm
தேசிய பங்குச் சந்தை ஊழல் விவகாரம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா பங்குச் சந்தை முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil chitra ramkrishna


சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியார் ஒருவரிடம் பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை கசியவிட்டதாகவும், அந்த சாமியார் அறிவுரையின்படி செயல்பட்டதாகவும் செபி உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் குழும அதிகாரியாக ஆனந்த் சுப்ரமணியனை நியமித்ததிலும் முறைகேடு நடந்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஆனந்த் சுப்ரமணியன் சென்னையில் கைது செய்யப்பட்டார். பின்னர் சித்ராவுக்கு முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவரையும் டெல்லியில் சிபிஐ கைது செய்தது. பின்னர் சித்ரா, ஆனந்த் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்கும்படி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நகை வாங்குவோருக்கு தங்க வேட்டை.. 50% தள்ளுபடி அறிவிப்பு!
இவ்வழக்கு விசாரணையின்போது, ஆனந்த் சுப்ரமணியன்தான் அந்த இமயமலை சாமியார் என சிபிஐ தெரிவித்தது. இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கும்படி டெல்லி நீதிமன்றத்தில் ஆனந்த் சுப்ரமணியன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், எஃப்ஐஆரில் ஆனந்த் சுப்ரமணியனின் பெயர் இல்லாததால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். மேலும், பங்குச் சந்தை ஊழலில் அவருக்கு தொடர்பில்லை எனவும் தெரிவித்தார். எனினும், ஆனந்த் சுப்ரமணியனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்