ஆப்நகரம்

சேவைக் கட்டண ரூல்ஸ்.. உயர் நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

சேவைக் கட்டண விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை தள்ளிவைப்பு.

Samayam Tamil 16 Aug 2022, 4:15 pm
சேவைக் கட்டணங்கள் தொடர்பான விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், இம்மனு விசாரணையை தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil service charge


உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் மிக அதிக சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பல இடங்களில் சேவைக் கட்டணம் வலுக்கட்டாயமாக வசூலிக்கப்படுவதாகவும் அண்மையில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கட்டாயப்படுத்தி சேவைக் கட்டனம் வசூலிக்கக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதையடுத்து, சேவைக் கட்டணம் தொடர்பாக சில விதிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டது. அதில், சேவை கட்டணம் வலுக்கட்டாயமாக வசூலிக்கக்கூடாது, பில்லில் சேவைக் கட்டணத்தை நீக்கும்படி வாடிக்கையாளர் கூறினால் நீக்க வேண்டும் உள்ளிட்ட விதிகள் இடம்பெற்றன.

Insurance: பாலிசிதாரர்களுக்கு ஆட்டோமேட்டிக் செட்டில்மெண்ட்.. ரெடியாகிறது புதிய திட்டம்!
இந்த விதிமுறைகளை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேசிய உணவகங்கள் சங்கம் மனுத்தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் விதிமுறைகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த இடைக்கால தடையை எதிர்த்து மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், விசாரணையை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்