ஆப்நகரம்

பங்குச் சந்தை ஊழல்.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமீன்.. டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

பங்குச் சந்தை ஊழல் வழக்கில் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன்.

Samayam Tamil 28 Sep 2022, 4:38 pm
பங்குச் சந்தை ஊழல் வழக்கில் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவும், குழும அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil chitra ramkrishna


பங்குச் சந்தை தொடர்பான ரகசியங்களை கசியவிட்டதாகவும், குறிப்பிட்ட சில வர்த்தகர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் குழும அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் தேசிய பங்குச் சந்தையின் கம்பியூட்டர் சர்வர்கள் முதல் பல நிலைகளில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இமயமலை சாமியார் ஒருவர் அறிவுரைப்படி சித்ரா செயல்பட்டதாகவும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இலவச திட்டம் நீட்டிப்பு!
இவ்வழக்கில் கடந்த மார்ச் 6ஆம் தேதி சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. இருவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டு வந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருவரும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கும், ஆனந்த் சுப்ரமணியனுக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்