ஆப்நகரம்

இது என்னடா திருப்பதி ஏழுமலையானுக்கு வந்த சோதனை

பண மதிப்பு நீக்க நடவடிக்கையும், அதன் காலக்கெடுவும் முடிவடைந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் பணத்தையும் மாற்ற முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

TNN 27 Mar 2017, 9:56 pm
புதுதில்லி: பண மதிப்பு நீக்க நடவடிக்கையும், அதன் காலக்கெடுவும் முடிவடைந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் பணத்தையும் மாற்ற முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Samayam Tamil demonetisation same procedure for lord venkateswara too
இது என்னடா திருப்பதி ஏழுமலையானுக்கு வந்த சோதனை


கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. அதேபோல், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை செல்லத்தக்க புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கான வழிகள் சிலவற்றையும் மத்திய அரசு அறிவித்தது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையை தொடர்ந்து, வங்கிகளில் பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதேபோல், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், அதன்பின்னர், ரிசர்வ் வங்கி கிளைகளில் 2017-ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை உரிய காரணங்களை கூறி பழைய ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் மாற்றிக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

ஆனால், ரிசர்வ் வங்கிக் கிளைகளில் கூட தற்போது பொதுமக்கள் பணத்தை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. #DeMonetisation காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தோர் மட்டுமே ரிசர்வ் வங்கிக் கிளைகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும். அப்படி மாற்றுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான பல்வேறு வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. மத்திய அரசு அறிவித்தபடி, ரிசர்வ் வங்கிக் கிளைகளில் சாமானியர்கள் தங்களது பணத்தை மாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட ரூ.12.70 கோடி மதிப்பிழக்கம் செய்யப்பட்ட பழைய நோட்டுகளை மாற்ற முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பழைய நோட்டை மாற்றுவதற்கான காலக்கெடு முடிந்து விட்டதாக ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளதாக தெரிகிறது.

இம்மாதம் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கிக் கிளைகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என தான் கொடுத்த வாக்கை, சாமனிய மக்களிடம் மத்திய அரசு கடைபிடிக்காததை போல ஏழுமலையானிடமும் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#DeMonetisation: Same procedure for Lord venkateswara too

அடுத்த செய்தி

டிரெண்டிங்