ஆப்நகரம்

இனி இலவச ரேஷன் பொருட்கள் கிடையாது.. மத்திய அரசு எடுக்கும் முக்கிய முடிவு!

இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மேலும் நீட்டிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு நிதியமைச்சகம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Jun 2022, 2:28 pm
இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை மேலும் நீட்டிக்கக்கூடாது எனவும், திட்டத்தை நீட்டித்தால் நிதிநிலை மேலும் மோசமடையும் எனவும் மத்திய அரசுக்கு நிதியமைச்சகத்தின் செலவினத் துறை எச்சரித்துள்ளது. இதனால், இலவச ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil department of expenditure warns against extending pm garib kalyan anna yojana beyond september 2022
இனி இலவச ரேஷன் பொருட்கள் கிடையாது.. மத்திய அரசு எடுக்கும் முக்கிய முடிவு!


​கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம்

கொரோனா நெருக்கடி காலம் தொடங்கியபோது எளிய மக்களுக்காக பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PM Garib Kalyan Anna Yojana) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

​இலவச ரேஷன் பொருட்கள்

இத்திட்டத்தின் கீழ் 80 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ கொண்டைக்கடலை மாதம் தோறும் வழங்கப்பட்டது.

​திட்டம் நீட்டிப்பு

2022 பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியபோது, செப்டம்பர் மாதம் வரை கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இதன்படி தற்போதும் இத்திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

​எச்சரிக்கை

இந்நிலையில், பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை செப்டம்பர் மாதத்துக்கு மேல் நீட்டித்தாலோ, வரி குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலோ மத்திய அரசின் நிதிநிலை மோசமான விளைவுகளை சந்திக்கும் என நிதியமைச்சகத்தின் செலவினத் துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

​நீட்டித்தால் என்னாகும்?

செப்டம்பர் மாதத்துக்கு மேல் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை நீட்டித்தால் மத்திய அரசுக்கு கூடுதலாக 80,000 கோடி ரூபாய் செலவாகும் எனவும், உணவு மானியம் 3.7 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துவிடும் எனவும் செலவினத் துறை எச்சரித்துள்ளது.

​வரிக் குறைத்தால் ஆபத்து

இதுபோக நடப்பு நிதியாண்டில் கூடுதல் வரிக் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் மத்திய அரசின் நிதிநிலையும், பட்ஜெட்டும் பாதிப்படையும் என செலவினத் துறை தெரிவித்துள்ளது.

​அரசின் நடவடிக்கைகள்

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு அண்மையில் உரம் மானியத்தை உயர்த்தியது. மேலும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதுபோக சமையல் எண்ணெய் மீதான சுங்க வரியை குறைத்தது. இத்துடன் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்களும் சேர்த்து மத்திய அரசின் நிதிநிலையை மோசமடையச் செய்துள்ளதாக செலவினத் துறை கூறுகிறது.

​இலவச ரேஷன் பொருட்கள் இல்லையா?

இதன் விளைவாக, வரும் செப்டம்பர் மாதத்துக்கு பின் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்