ஆப்நகரம்

பிஎஃப் சிறப்பு திட்டம்... ரூ.7 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும்!

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய் கூட செலுத்தாமல் ரூ.7 லட்சம் வரை பயன்பெறலாம்.

Samayam Tamil 6 Dec 2021, 1:52 pm
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சார்பாக ஊழியர்களின் நலனுக்கான சிறப்புத் திட்டங்களும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் மிக முக்கியமான ஒரு திட்டம்தான். டெபாசிட் இணைப்பு காப்பீட்டு திட்டம். இது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டமாகும். அவர்களின் மரணத்தின்போது நாமினிக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
Samayam Tamil EPFO


இத்திட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் குறைந்தபட்சம் ரூ.2 லட்சமும் அதிகபட்சம் ரூ.6 லட்சமும் காப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் கொரோனா பிரச்சினையைத் தொடர்ந்து இந்த காப்பீட்டுப் பணம் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் எனவும், அதிகபட்சம் ரூ.7 லட்சம் எனவும் உயர்த்தப்பட்டது. அதாவது, பிஎஃப் சிறப்பு டெபாசிட் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணம் எதுவும் செலுத்தாமலேயே அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரையில் பயன்பெற முடியும்.

பிஎஃப் அமைப்போடு இணைக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு இச்சலுகை கிடைக்கும். அவரது மரணத்துக்குப் பிறகு நாமினி அல்லது குடும்ப உறுப்பினருக்கு இத்தொகை வழங்கப்படும். அவர் இறப்பதற்கு முன் தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு நிறுவனத்தில் பணியாற்றியிருக்க வேண்டும். வெவ்வேறு நிறுவனங்களாகக் கூட இருக்கலாம். இதற்கான தொகை நாமினி அல்லது வாரிசுக்கு நேரடியாக வங்கிக் கணக்கிலேயே அனுப்பப்படும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் இத்திட்டத்தில் உதவி பெறுவதற்கு பிரீமியம் தொகையோ அல்லது டெபாசிட் தொகையோ எதுவும் செலுத்தத் தேவையில்லை. குறைந்தபட்ச இன்சூரன்ஸ் பணம் - ரூ.2.5 லட்சம். அதிகபட்ச இன்சூரன்ஸ் பணம் - ரூ.7 லட்சம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்