ஆப்நகரம்

சீனியர் சிட்டிசன்களுக்கு சூப்பரான திட்டம்.. முதலீடு 1527% உயர்வு!

சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் டெபாசிட் தொகை 1527% உயர்ந்துள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 7 Aug 2022, 2:38 pm
சீனியர் சிட்டிசன்களை பொறுத்தவரை ரிஸ்க் இல்லாத பாதுகாப்பான முதலீடு அவசியம். இவ்வகையில், முதலுக்கு பாதுகாப்பு, பாதுகாப்பான வருமானம் என சிறு சேமிப்பு திட்டமான சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme) நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Samayam Tamil senior citizen


2013-14ஆம் ஆண்டு முதல் 2021-22ஆம் ஆண்டு வரை சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் குவிந்த டெபாசிட்டுகளின் அளவு 1527% உயர்ந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரிகிறது. 2013-14ஆம் ஆண்டில் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் இருந்த டெபாசிட் தொகை 1997.9 கோடி ரூபாய்.

2021-22ஆம் ஆண்டில் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் இருந்த தொகை 32,507.89 கோடி ரூபாய்.

குறிவைக்கப்படும் சீனியர் சிட்டிசன்கள்.. லட்சக்கணக்கில் பறொபோகும் பணம்!
2013-14 : ரூ.1997.90 கோடி

2014-15 : ரூ.3007.05 கோடி

2015-16: ரூ.12,155.19 கோடி

2016-17 : ரூ.10,001.18 கோடி

2017-18 : ரூ.16,457.86 கோடி

2018-19 : ரூ.19,320.31 கோடி

2019-20 : ரூ.24,595.54 கோடி

2020-21 : ரூ.29,136.59 கோடி

2021-22 : ரூ.32,507.89 கோடி

தற்போது சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 7.4% வட்டி கிடைக்கிறது. முதலீடு செய்ய விரும்புவோர் தபால் அலுவலகம் வழியாக முதலீட்டை தொடங்கலாம். குறைந்தபட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சம் 15 லட்சம் ரூபாயும் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 50,000 ரூபாய் வரையிலான வட்டித் தொகைக்கு வரி விலக்கு உண்டு.

அடுத்த செய்தி

டிரெண்டிங்