ஆப்நகரம்

வங்கி டெபாசிட்டுக்கு மீண்டும் செக் வைத்தது மத்திய அரசு!!

மதிப்பிழந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்பவர்கள், வரும் 30ஆம் தேதி வரை, தங்களது வங்கிக் கணக்கில் ரூ. 5000த்துக்கு மேல் ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்று மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

TOI Contributor 19 Dec 2016, 1:36 pm
மதிப்பிழந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்பவர்கள், வரும் 30ஆம் தேதி வரை, தங்களது வங்கிக் கணக்கில் ரூ. 5000த்துக்கு மேல் ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்று மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
Samayam Tamil deposits more than rs 5000 in old notes allowed just once per account until december 30 2016
வங்கி டெபாசிட்டுக்கு மீண்டும் செக் வைத்தது மத்திய அரசு!!


நாட்டில் கடந்த மாதம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள மதிப்பு இழந்ததாக அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்து இந்த மாதம் 31ஆம் தேதி வரை வங்கியில் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுக்களை செலுத்த அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது. மேலும், தற்போது இந்த ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் மட்டுமே செய்ய முடியும், வங்கிகளில் மாற்ற முடியாது.

இந்நிலையில், வரும் 30ஆம் தேதி வரை மதிப்பிழந்த ரூபாய் நோட்டுக்களை ரூ. 5000த்துக்கு மேல் ஒருமுறை மட்டுமே ஒருவர் டெபாசிட் செய்ய முடியும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பான அறிவிப்புகளை இன்று மாலை மத்திய அரசு வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டின் பிரதம மந்திரி கரிப் கல்யான் யோஜனா வரி மற்றும் முதலீடு வரைமுறைக்கு உட்பட்டே இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்