ஆப்நகரம்

சென்னையில் கடையை போட்ட தோனி.. திமுகவுடன் புது டீலிங்!

கிரிக்கெட் வீரர் தோனி முதலீடு செய்துள்ள பீர் நிறுவனம் சென்னையில் வியாபாரத்தை தொடங்க திட்டம்.

Samayam Tamil 11 Apr 2022, 1:28 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி தமிழகத்தை தனது இரண்டாவது வீடு என கூறி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் தோனி பொறுப்பு வகித்ததால் அவருக்கும், தமிழ்நாடுக்கும் இடையேயான தொடர்பு மேலும் அதிகரித்தது.
Samayam Tamil dhoni


இந்நிலையில், தோனி முதலீடு செய்துள்ள பீர் நிறுவனம் சென்னையில் கால்தடம் பதிக்க முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த 7ink Brews என்ற பீர் நிறுவனம் தோனியை தனது விளம்பரத் தூதராகவும், பங்குதாரராகவும் அறிவித்தது.

7ink Brews நிறுவனம் Copter7 என்ற பிராண்ட் பெயரில் ஸ்ட்ராங்கான பீர்களை தயாரித்து வருகிறது. இந்த பீர்கள் ஏற்கெனவே மும்பை, பெங்களூரு, கோவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையிலும் Copter7 பீர்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பழைய முதலீடெல்லாம் வேணாம்ங்க.. இனி புது ரூட்டு இதுதான்.. வண்டியை திருப்பிய இந்தியர்கள்!
ஏற்கெனவே சென்னைக்கும், தோனிக்கும் இடையேயான உறவு வலுவாக உள்ள நிலையில், Copter7 சென்னைக்குள் நுழைய முயற்சிக்கிறது. இதற்காக அக்கார்ட் குழுமத்துடன் (Accord Group) பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதில் சுவாரஸிய தகவல் என்னவென்றால், அக்கார்ட் குழுமம் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் குடும்பத்தால் நடத்தப்பட்டு வரும் நிறுவனம் ஆகும். Copter7 நிறுவனத்தின் பீர்களை விற்பனை செய்ய அக்கார்ட் குழுமத்துடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ஏற்பட்டால் அக்கார்ட் குழுமத்தின் ஹோட்டல்களில் Copter7 பீர்கள் விற்பனை செய்யப்படும்.

கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. இதை கொண்டாடும் வகையில் சென்னையில் ஒரு நிகழ்வும் நடைபெற்றது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தோனி இருவரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்