ஆப்நகரம்

எல்லாருக்கும் ரூ.4 கோடி வழங்கும் ரிசர்வ் வங்கி? பரபரப்புத் தகவல்.. உண்மை என்ன?

12500 ரூபாய்க்கு 4.62 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி வழங்குவதாக பரவும் செய்தி உண்மையா?

Samayam Tamil 21 Jan 2022, 6:33 pm
கடந்த சில தினங்களில் இந்தியாவில் ஏராளமானோருக்கு ஒரு திடீர் இமெயில் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த இமெயிலில் 12500 ரூபாய் பணம் செலுத்தினால் 4.62 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியே வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil cash


இந்த இமெயிலால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இமெயில் குறித்து மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 12500 ரூபாய்க்கு 4.62 கோடி ரூபாய் கிடைக்கும் என பரவும் இமெயில் போலியானது என மத்திய அரசின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பத்திரிகை தகவல் அலுவலகம், “12500 ரூபாய்க்கு 4 கோடியே 62 லட்சம் ரூபாய் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி கூறுவதாக ஒரு இமெயில் பரவி வருகிறது. இது ஒரு போலியான இமெயில். தனிநபர் விவரங்களை கேட்டு ரிசர்வ் வங்கி இமெயில் அனுப்புவதில்லை” என்று தெரிவித்துள்ளது.

வட்டியை உயர்த்திய ஐசிஐசிஐ வங்கி.. சீனியர் சிட்டிசன்களுக்கும் ஹேப்பி நியூஸ்!
இதுபோன்ற போலி இமெயில்களுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம் எனவும், சொந்த தகவல்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக பாஸ்வோர், PIN, OTP உள்ளிட்ட தகவல்களை பகிர்வது ஆபத்து என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்