ஆப்நகரம்

மோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்!

கடன் வாங்கியவர்களுக்கு சலுகை அறிவிப்பாக நவம்பர் 5ஆம் தேதிக்குள் வட்டித் தொகை டெபாசிட் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 28 Oct 2020, 4:47 pm
கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ஆறு மாதங்களுக்கு வங்கிக் கடன் தவணை செலுத்துவதில் மத்திய அரசு சலுகை அறிவித்திருந்தது. ஆகஸ்ட் மாத இறுதிவரையில் இச்சலுகை இருந்த நிலையில், கடன் வாங்கிய பலர் தங்களது கடன் தவணையைச் செலுத்தாமல் இருந்தனர். சிலர் முறையாகக் கடன் தவணையை இக்காலத்தில் செலுத்தினர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ரூ.2 கோடி வரையில் கடன் வாங்கியவர்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் நவம்பர் 5ஆம் தேதிக்குள் வட்டிச் சலுகையை வழங்கிவிடுவதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
Samayam Tamil money


நவம்பர் மாத மத்தியில் தீபாவளிப் பண்டிகை வரவிருக்கும் நிலையில், மக்களுக்கு இந்த வட்டிச் சலுகை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்த உத்தரவை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அனைத்து வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள அறிக்கையில், சரியான கால வரம்புக்குள் கடனாளிகளுக்கான வட்டிச் சலுகைப் பணத்தைத் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெறும் ஒரு ரூபாய்க்கு தங்கம் வாங்கலாம்... இது செம வாய்ப்பு!

ரூ.2 கோடி வரையில் கடன் வாங்கியவர்களின் வட்டிக்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு அந்தத் தொகை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். கடனாளிகளின் வங்கிக் கணக்கில் இந்தத் தொகையைச் செலுத்தியவுடன் வங்கிகளுக்கு ஏற்பட்டும் இழப்புக்கு மத்திய அரசிடமிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக் கடன், கல்விக் கடன், கிரெடிட் கார்டு பாக்கி, வாகனக் கடன், குறு நிறு நடுத்தர நிறுவனக் கடன், நுகர்வோர் சாதனங்களுக்கான கடன், நுகர்வோர் கடன் போன்ற பிரிவுகளின் கீழ் கடன் பெற்றவர்கள் இச்சலுகையின் கீழ் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்