ஆப்நகரம்

பென்சனர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இதைச் செய்யாவிட்டால் பென்சன் கிடைக்காது!

இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன...

Samayam Tamil 25 Feb 2021, 12:34 pm
நீங்கள் பென்சன் வாங்குபவராக இருந்தால் கட்டாயம் இதைத் தெரிந்துகொள்ளுங்கள். இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. இதைச் செய்யாவிட்டால் பென்சன் கிடைக்காது.
Samayam Tamil do this work immediately otherwise pension will be stoped
பென்சனர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இதைச் செய்யாவிட்டால் பென்சன் கிடைக்காது!


ஆயுள் சான்றிதழ்!

பென்சன் பெறுபவர்கள் அவர்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமாகும். ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் மாதத்துக்குள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வந்தது. சென்ற மாதம் மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கால வரம்பைத் தளர்த்தியது.

கால அவகாசம் நீட்டிப்பு!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் 2020 நவம்பர் 1ஆம் தேதி முதல் 2020 டிசம்பர் 31ஆம் தேதி வரையில் தங்களது ஆயுள் சான்றிதழைத் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வெளியான அறிவிப்பில், 2021 பிப்ரவரி 28ஆம் தேதி வரையில் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என்று கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பானது அரசின் பென்சன் பெறுவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவோர் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதில் நடைமுறைச் சிக்கல் நிலவியதைக் கருத்தில் கொண்டு இரண்டாவது முறையாக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் கால வரம்பு நீட்டிக்கப்பட்டது.

முக்கியச் செய்தி!

ஆயுள் சான்றிதழ் சம்பர்பிப்பதற்கான கால அவகாசம் இன்னும் சில நாட்களில் முடிவடைகிறது. எனவே ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்காமல் இருந்தால் உடனடியாக தாக்கல் செய்வது நல்லது. இல்லாவிட்டால் பென்சன் சரியாகக் கிடைக்காது. பென்சன் வாங்குவோர் தங்களது ஆயுள் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே சமர்ப்பிக்கலாம். போஸ்ட் ஆபீஸ் மூலமாக இச்சேவை வழங்கப்படுகிறது. இதில், தபால் காரர்கள் வீடு தேடி வந்து ஆயுள் சான்றிதழை வாங்கிச் செல்வார்கள்.

ஆன்லைன் மூலமாக...

டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பதாரரிடம் ஆதார் நம்பர், மொபைல் நம்பர் இருக்க வேண்டும். ஜீவன் பிரமான் (Jeevan Pramaan) செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். new registration என்பதில் சென்று ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், பெயர், மொபைல் எண், பென்சன் பேமெண்ட் ஆர்டர் (PPO) ஆகிய விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். ‘Send OTP’ என்பதை கிளிக் செய்தால் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு submit கொடுக்க வேண்டும்.

ஜீவன் பிரமான் செயலியில் ஓடிபி எண் மூலம் லாக் இன் செய்ய வேண்டும். 'Generate Jeevan Pramaan' என்பதைத் தேர்ந்தெடுத்து ஆதார் எண், மொபைல் எண் ஆகிய விவரங்களைப் பதிவிடவும். ’generate OTP’ என்பதை கிளிக் செய்தால் உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அதைப் பதிவிடவும். PPO எண், பெயர், பென்சன் கொடுக்கும் ஏஜென்சியின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும். ஆதார் விவரங்களை வைத்து கை ரேகை ஸ்கேன் செய்தால் ஜீவன் பிரமான் பத்திரம் திரையில் தோன்றும். ஆயுள் சான்றிதழ் கிடைப்பது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ்ஸாக வரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்