ஆப்நகரம்

இவங்களுக்கெல்லாம் சல்லி பைசா கூட கிடையாது.. மத்திய அரசு எச்சரிக்கை!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இவர்களுக்கெல்லாம் ஒரு ரூபாய் கூட கிடைக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 7 Oct 2022, 9:11 am
மத்திய அரசின் கனவுத் திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) தொடர்பான முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தின் 12ஆவது தவணை அக்டோபர் மாத முடிவுக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலுள்ள 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணையை எதிர்நோக்கியுள்ளனர். இருப்பினும், இ-கேஒய்சி அப்டேட்டை இன்னும் முடிக்காத விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் 12ஆவது தவணையின் பலன் கிடைக்காது.
Samayam Tamil pm kisan


பிஎம் கிசான் திட்டத்தின் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்தின் பலனைப் பெற, e-KYC சரிபார்ப்பை நிறைவு செய்வது அவசியம். அதாவது, பதிவு செய்த விவசாயிகள் இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் OTP அடிப்படையிலான e-KYC அப்டேட்டை முடிக்க வேண்டும். இதைச் செய்ய, நீங்கள் அருகிலுள்ள பொதுச் சேவை மையத்தைப் பார்வையிடலாம்.

உண்மையில், விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவே மத்திய மோடி அரசு இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில் நேரடியாக விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இந்த ஒரு பாலிசி போதும்.. உங்க குழந்தையின் எதிர்காலம் வேற லெவல்!
e-KYC எப்படி முடிப்பது?

* PM Kisan Yojana பயனாளிகள் e-KYC ஐ முடிக்க முதலில் pmkisan.gov.in இணையதளத்திற்குச் செல்லவும்.
* அங்கே ஃபார்மர்ஸ் கார்னர் ஆப்சனில் சென்று E-KYC டேப்பில் கிளிக் செய்யவும்.
* புதிய வலைப்பக்கத்தில், ஆதார் எண்ணை உள்ளிட்டு, சர்ச் பட்டனை கிளிக் செய்யவும்.
* உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
* அந்த OTP நம்பரை பதிவிட்டால் போதும். இ-கேஒய்சி அப்டேட் செய்யப்பட்டுவிடும். பணம் வருவதிலும் சிக்கல் இருக்காது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்