ஆப்நகரம்

விமானத்தில் பறந்த 6.3 கோடிப் பேர்! கொரோனாவால் வீழ்ச்சி!

2020ஆம் ஆண்டில் மொத்தம் 6.3 கோடிப் பேர் மட்டுமே உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Samayam Tamil 17 Jan 2021, 2:13 pm
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில், மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்தில் விமானச் சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது. வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் விமானப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் குறைந்துவிட்டது. பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில் மொத்தம் 6.3 கோடிப் பேர் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
Samayam Tamil air


2019ஆம் ஆண்டில் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையை விட இது 56.29 சதவீதம் அதிகமாகும். டிசம்பர் மாதத்தில் வழக்கமாக டிசம்பர் மாதத்தில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விமானத்தில் அதிகப் பேர் பயணம் செய்வார்கள் ஆனால் இந்த முறை கொரோனா பாதுகாப்பு கருதி விமானப் பயணத்தில் அதிகப் பேர் பயணம் செய்யவில்லை. 2019 டிசம்பர் மாதத்தில் பயணம் செய்ததை விட 2020 டிசம்பரில் 43.72 சதவீதம் குறைவான அளவில் 73.27 லட்சம் பேர் பயணித்திருக்கின்றனர்.

தங்கம் விலை: கடைக்கு போயி நகைய அள்ளிட்டு வாங்க!

இந்திய விமான நிறுவனங்களைப் பொறுத்தவரையில், இண்டிகோ நிறுவனம் அதிகபட்சமாக 3.25 கோடிப் பேரை 2020ஆம் ஆண்டில் ஏற்றிச் சென்றுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துச் சந்தையில் 51.7 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து 14.9 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மொத்தம் 93.9 லட்சம் பேரை ஏற்றிச் சென்றுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் 69.32 லட்சம் பேரும், கோ ஏர் விமானத்தில் 54.38 லட்சம் பேரும், ஏர் ஏசியா நிறுவனத்தில் 43.87 லட்சம் பேரும், விஸ்தாரா நிறுவனத்தில் 39.39 லட்சம் பேரும் பயணித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்