ரிலையன்ஸ் ஜியோ!
இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் கடந்த 2016ஆம் ஆண்டில் நுழைந்தது. வாய்ஸ் கால், டேட்டா, SMS போன்ற அனைத்து சேவைகளும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் ஜியோவுக்கு மாறத் தொடங்கினர். இதன் மூலம் அதி விரைவாகவே நம்பர் 1 இடத்தை ஜியோ பிடித்தது.
எச்சரிக்கை!
இந்தியாவில் இப்போது பெரும்பாலானோர் ஜியோ சிம் கார்டுதான் பயன்படுத்துகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நிறுவனம் சார்பாக தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நிறுவனம் தரப்பிலிருந்து SMS அனுப்பப்பட்டுள்ளது.
காத்திருக்கும் ஆபத்து!
வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த செய்தியில் யாருக்கும் தனிநபர் விவரங்களைப் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தெரியாத நபர்களிடம் இருந்து போன் அல்லது SMS வந்தால் அதில் தனிநபர் விவரங்களை வழங்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தெரியாத ஆப் டவுன்லோடு!
தனிநபர் விவரங்கள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதோடு கண்ட கண்ட மொபைல் ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டாம் எனவும் ஜியோ எச்சரித்துள்ளது. தெரியாத மொபைல் ஆப்களை டவுன்லோடு செய்தால் அதன் மூலம் வாடிக்கையாளர்களின் தனிநபர், வங்கிக் கணக்கு விவரங்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.
ஆன்லைன் மோசடிகள்!
இந்தியாவில் இப்போது ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தெரியாத நபரிடமிருந்து அழைப்பு, SMS வரும். அதில் நமது வங்கிக் கணக்கில் விவரங்கள், பான் கார்டு நம்பர், ஓடிபி போன்ற விவரங்கள் கேட்கப்படும். அதை நாம் வழங்கினால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் திருடப்பட்டு விடும். இதுபோன்ற மோசடிகள் இப்போது அதிகமாக நடைபெறுகின்றன. எனவே இதுபோன்ற வலைகளில் சிக்க வேண்டாம் என்று ஜியோ எச்சரித்துள்ளது.
கவனம் தேவை!
இந்தியாவில் இப்போது கிட்டத்தட்ட அனைவரிடமுமே ஸ்மார்ட்போன் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன்களில் நிறைய நிறைய மொபைல் ஆப்கள் வந்துவிட்டன. இதைப் பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. எனவே மொபைல் ஆப் டவுன்லோடு விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையும் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.