ஆப்நகரம்

Pension: ஓய்வூதியதாரர்கள் ஹேப்பி.. மத்திய அரசு நடவடிக்கை!

புதுவையில் மத்திய அரசு நடத்திய ஓய்வூதியதாரர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்.

Samayam Tamil 29 Jun 2022, 2:21 pm
பென்சன் சார்ந்த பல்வேறு விதிமுறைகள் கடந்த சில ஆண்டுகளில் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய அரசு சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Samayam Tamil senior citizen


இந்த வரிசையில் நேற்று புதுச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டது. இதில் சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், ஓய்வூதிய விதிமுறைகள், ஓய்வூதியதாரர்களின் வாழ்வை எளிதாக்குவதற்கு ஓய்வூதியதாரர் நலத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கொரோனா நெருக்கடி காலத்துக்கு பின் தென்னிந்தியாவில் நடைபெறும் முதல் ஓய்வூதியதாரர் விழிப்புணர்வு கூட்டம் இதுவே ஆகும்.

சீனியர் சிட்டிசன்களுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா.. வட்டியை உயர்த்திய வங்கி!
பென்சன் விதிமுறைகள், பென்சன் பெறுவதற்கான உரிமை, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான செயல்முறைகள், பென்சன் கொள்கை மற்றும் செயல்முறைகளில் நடந்துள்ள மாற்றங்கள் பற்றி இந்நிகழ்வில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இதுபோக பென்சன் கொள்கை சீர்திருத்தங்கள், குடும்ப பென்சன் பற்றியும் விளக்கப்பட்டது. டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் (Digital life certificate) சமர்ப்பிப்பது எப்படி என்பது பற்றியும், வருமான வரி தொடர்பான விவகாரங்கள் பற்றியும் விளக்குவதற்கு சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்