ஆப்நகரம்

வெளுத்து வாங்கும் மழை.. உச்சத்தில் காய்கறி விலை!

கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Samayam Tamil 27 Sep 2022, 1:19 pm
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வழக்கத்துக்கு மாறாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் காய்கறிகள் வரத்து குறைந்ததால் பல்வேறு காய்கறிகளின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. அண்டை மாநிலங்களான இமாசலப் பிரதேசம், சண்டிகர், டெல்லி போன்ற இடங்களிலும் காய்கறி விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil veg price hike


பச்சை பட்டாணி விலை கடந்த வாரம் கிலோ 130 ரூபாயிலிருந்து இந்த வாரம் 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல தக்காளி விலை 40 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக அதிகரித்துள்ளது. காளிபிளவர் 70 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும், பாகற்காய் 60 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும், கேரட் 50 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும், முள்ளங்கி 40 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும், புடலங்காய் 40 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும், எலுமிச்சை (250 கிராம்) 30 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும், கொத்தமல்லி (100 கிராம்) 20 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.

மேற்கூறிய காய்கறிகளின் விலை உயர்ந்திருந்தாலும் வெங்காயம், உருளைக் கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றின் விலை உயரவில்லை. அடுத்து வரும் நாட்களிலும் விலை அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். எனினும் மழை பாதிப்பு குறையும் பட்சத்தில் சில வாரங்களில் காய்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திருப்ப வாய்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்