ஆப்நகரம்

ஊரடங்கில் எடுத்த பிஎஃப் பணம் ரூ.30,000 கோடி!

ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் ரூ.30,000 கோடி பிஎஃப் தொகையை வாடிக்கையாளர்கள் எடுத்துள்ளனர்.

Samayam Tamil 28 Jul 2020, 8:32 pm
இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு தரப்பிலிருந்து பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதோடு, பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக எடுத்துப் பயன்படுத்த மத்திய அரசு வழிவகை செய்திருந்தது. மார்ச் மாத இறுதியில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதாக அறிவித்தது.
Samayam Tamil pf money


அதன்படி, பிஎஃப் பணத்தை அதிகளவில் எடுத்து வருகின்றனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 80 லட்சம் உறுப்பினர்கள் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் ரூ.30,000 கோடியை எடுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 6 கோடி சம்பளதாரர்கள் மற்றும் அவர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்களிடமிருந்து கட்டாய பங்களிப்புகள் வழியாக வசூலிக்கப்பட்ட 10 லட்சம் கோடி ரூபாய் கார்பஸ் தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிர்வகிக்கிறது. இந்த நிதியாண்டில் ரூ.30,000 கோடியை பிஎஃப் உறுப்பினர்கள் எடுத்துள்ளதால் 2020-21 நிதியாண்டில் ஈட்டும் வருவாய் பாதிக்கப்படலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Share Market: ராக்கெட் வேகத்தில் சென்செக்ஸ்... டாப் பங்குகள் இவைதான்!

பிஎஃப் டெபாசிட் தொகையிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட பணத்தில் கிட்டத்தட்ட 30 லட்சம் பயனாளிகள் கொரோனா சமயத்தில் அரசு தரப்பில் வழங்கப்பட்ட சிறப்புச் சலுகையின் கீழ் ரூ.8,000 கோடியை எடுத்துள்ளார்கள். மீதமுள்ள 22,000 கோடி ரூபாயை 50 லட்சம் பேர் வழக்கமான முறையில் வெளியே எடுத்துள்ளார்கள். கொரோனா வைரச் பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிப்புகளைச் சமாளிக்கவும், நிதி நெருக்கடி வராமல் இருக்கவும் பிஎஃப் பணத்தை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வித்டிரா செய்து வருகின்றனர்.

இனி வரும் நாட்களில் சுமார் ஒரு கோடிப் பேர் தங்களது பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை வெளியே எடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்