ஆப்நகரம்

ஆன்லைன் ஷாப்பிங்கை உயர்த்திய கொரோனா!

கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து இணையவாசிகளின் ஆன்லைன் ஷாப்பிங் இரு மடங்கு அதிகரித்துள்ளது.

Samayam Tamil 29 Aug 2020, 10:00 pm
இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா பாதிப்புகள் தீவிரமாக இருந்து வருகின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்தில் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு, பொதுப் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே அடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டது. இக்காலத்தில் இணையப் பயன்பாடும் அதிகரித்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாக அதிகமாக ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர்.
Samayam Tamil online shopping


குறிப்பாக, நகர்ப்புற மக்கள் ஊரடங்கு காலத்துக்குப் பின்னர் இணையம் பயன்படுத்துவதும், ஆன்லைன் ஷாப்பிங் செய்வதும் இப்போது அதிகரித்துள்ளதாக கேண்டார் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று தற்போது பெரு நகரங்களில் அதிகமாக இருப்பதால், நகரத்தில் வாழும் மக்கள் அதிகமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்கின்றனர். இதன் எதிரொலியாக, நகர்ப்புறங்களில் ஆன்லைன் ஷாப்பிப் செய்யும் மக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

SBI: ஆன்லைன் வங்கிக் கணக்கு திறப்பது எப்படி?

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில், நகர வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த 3 மாத காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கை இரு மடங்கு வளர்ச்சியுடன் 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த 42 சதவீத வாடிக்கையாளர்களில் 50 சதவீதப் பேர் புதிய வாடிக்கையாளர்களாகவும், முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். கொரோனாவுக்கு முன்பு நகர்ப்புற ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாட்டின் மொத்த ஆன்லைன் ஷாப்பிங் செய்வோர் எண்ணிக்கையில் வெறும் 22 சதவீதமாகத்தான். இந்த எண்ணிக்கை தற்போது 42 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.

புதிதாக வந்துள்ள வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அமேசான் மற்றும் கூகுள் தளத்தின் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் தளத்திற்குள் வந்துள்ளதாகத் தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்