ஆப்நகரம்

இ-ஷ்ரம் கார்டு பெறுவது எப்படி? ஆன்லைனில் அப்ளை பண்ணலாம்!

இ-ஷ்ரம் கார்டு பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Samayam Tamil 4 Jan 2022, 7:50 pm
அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு இ-ஷ்ரம் (e-SHRAM) இணையதளத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதில் தொழிலாளர்களின் ஆதார் கார்டுகள் இணைக்கப்பட்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil e-shram card


இந்த தகவ அமைப்பில் தொழிலாளர்களின் பெயர், தொழில், முகவரி, கல்வித் தகுதி, திறமைகள், குடும்ப விவரம் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த இந்தியாவின் முதல் தகவல் அமைப்பும் இதுவே.

இ-ஷ்ரம் அமைப்பில் புலம்பெயர் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பிளாட்பார்ம் தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. ஏற்கெனவே நாடு முழுவதும் சுமார் 16 கோடிக்கு மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் அமைப்பில் இணைந்துள்ளனர்.

பணம் அனுப்ப இனி கட்டணம் அதிகம்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்!
இதற்கான பதிவு முழுக்க முழுக்க இலவசம். பொது சேவை மையங்கள் அல்லது அரசு அலுவலகங்களில் ஈசியாக பதிவு செய்துகொள்ளலாம். இந்தியாவில் உள்ள 38 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களை பதிவு செய்யவும், அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை வழங்கவும் இ-ஷ்ரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை இணையமைச்சர் ரமேஷ்வர் தேலி தெரிவித்துள்ளார்.

இ-ஷ்ரம் இணையதளத்தில் ஆன்லைனில் எப்படி பதிவு செய்வது?

* இ-ஷ்ரம் இணையதளத்தில் உள்ள Register (https://register.eshram.gov.in/#/user/self) பகுதிக்குச் செல்லவும்.

* அதில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் பதிவிட்டு, கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்தால் உங்கள் மொபைலுக்கு OTP வரும்.

* அதன்பின் அதில் காட்டப்படும் வழிகாட்டல்களை பின்பற்றினால் ஈசியாக இ-ஷ்ரமில் பதிவு செய்துவிடலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்