ஆப்நகரம்

ஜிஎஸ்டி பஞ்சாயத்து: 15ஆவது நிதிக் குழு நாளை கூடுகிறது!

ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசிக்க 15வது நிதி ஆணையத்தின் பொருளாதார ஆலோசனைக் குழு நாளை கூடுகிறது.

Samayam Tamil 3 Sep 2020, 4:26 pm
மாநில அரசுகளுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்குவதில் பிரச்சினை நீடிக்கிறது. தற்போதைய கொரோனா பிரச்சினையில் மாநில அரசுகள் அனைத்தும் நிதி நெருக்கடியில் இருப்பதால் மத்திய அரசிடமிருந்து நடப்பு நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மாநில அரசுகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. ஆனால் இப்போதைக்கு வழங்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பியுள்ளன.
Samayam Tamil 15th fc


இந்நிலையில், ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கு நாளை (ஆகஸ்ட் 4) 15ஆவது நிதிக் குழுவின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆணையத்தின் தலைவர் என்.கே.சிங் மற்றும் இதர உறுப்பினர்களும் இதில் பங்கேற்கின்றனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் வரி நிலைமை, ஜிஎஸ்டி இழப்பீடு, வருவாய்ப் பற்றக்குறை மானியம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பு ஆகிய பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வேலை இல்லாதவர்களுக்கு சம்பளம்... புதிய அறிவிப்பு!

நாளைய கூட்டத்தில் பினாகி சக்ரவர்த்தி, பிராச்சி மிஸ்ரா, ஓம்கார் கோஸ்வாமி, சஜித் செனாய், நீலகண்ட் மிஸ்ரா, ரத்தின் ராய், டி.கே.ஸ்ரீவத்ஸவா, அர்விந்த் விர்மானி, எம்.கோவிந்த ராவ், சுதிப்தோ முண்ட்லே, சங்கர் ஆச்சார்யா, பிரனாப் சென், கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் உள்ளிட்ட உறுப்பினர்கள் நாளைய கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை பிரச்சினை சூடிபிடித்துள்ள நிலையில் நாளைய ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்