ஆப்நகரம்

பொருளாதார மந்தநிலைக்கு காரணம் ரகுராம் ராஜன்: நிதி ஆயோக் துணைத்தலைவர் குற்றச்சாட்டு!!

இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்தான் காரணம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை அல்ல என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Sep 2018, 6:00 pm
இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்தான் காரணம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை அல்ல என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil பொருளாதார மந்தநிலைக்கு காரணம் ரகுராம் ராஜனாம்!!
பொருளாதார மந்தநிலைக்கு காரணம் ரகுராம் ராஜனாம்!!


இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ராஜிவ் குமார் கூறியிருப்பதாவது:
வாராக் கடன் மீதான ரகுராம் ராஜனின் கொள்கைகள்தான் நாட்டின் பொருளாதாரத்தை மந்தநிலைக்கு இட்டுச் சென்றது. ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்ததால் அல்ல. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு இருப்பதற்கு பொருளாதார டிரண்டிங்கில் சரிவு ஏற்பட்டு இருப்பதுதான். கடந்த 2015-16ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து எடுத்துக் கொண்டால் தொடர்ந்து ஆறு காலாண்டுகளுக்கு பொருளாதாரம் சரிந்தே வந்துள்ளது.

பொருளாதார சரிவுக்கு காரணமே வாராக்கடன் தொடர்பான வங்கி நடவடிக்கைகளில் தவறான கொள்கைகளை ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கையாண்டதுதான். இந்த அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது வாராக்கடன் ரூ. 4 லட்சம் கோடியாக இருந்தது. அது 2017 மத்தியில் ரூ. 10.5 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதன் பின்னர் தொழில் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதை வங்கிகள் நிறுத்திக் கொண்டன. இதற்கு காரணம் ரகுராம் ராஜன் தான். வளர்ச்சி சதவீதம் சில காலாண்டுகளில் 1 முதல் 2 சதவீதம் வரை சரிந்துள்ளது.

இவ்வாறு ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்