ஆப்நகரம்

முட்டை விலை உயர்வு.. இல்லத்தரசிகளுக்கு அடுத்த ஷாக்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 15 காசுகள் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.

Samayam Tamil 25 Jun 2022, 12:02 pm
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டைக்கான பண்ணை கொள்முதல் விலையை 5 ரூபாய் 20 காசுகளில் இருந்து இன்று ஒரே நாளில் 15 காசுகள் உயர்த்தி 5 ரூபாய் 35 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை கடந்த 22ஆம் தேதி 10 காசுகள் உயர்த்தப்பட்டது. அப்போது முதல் முட்டை விலை ரூ.5.20 ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது முட்டை விலை ரூ.5.35 ஆக அதிகரித்துள்ளது. காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
Samayam Tamil egg price


இந்த விலையானது கோழிப் பண்ணை வரலாற்றில் இல்லாத உச்சபட்ச விலையாகும். நாமக்கல் மண்டலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி முட்டை ஒன்றின் அதிகபட்ச விலை ரூ.5.25 ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த விலை உயர்வு குறித்து பண்ணையாளர்கள் கூறும் போது ”தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலங்களில் முட்டை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோடைக்கால துவக்கத்திலேயே அதிகளவு வெப்பத்தினால் வயதான கோழிகள் இறந்துவிடும் என்பதால் அவற்றை பண்ணையாளர்கள் விற்பனை செய்துவிட்டனர். மேலும் பண்ணைகளில் புதிதாக கோழிகளை விடாமல் இருந்து வந்துள்ளனர்.

நகை வாங்குவோர் வேதனை.. புதிய உச்சத்தில் தங்கம்!

இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி கணிசமாக குறைந்தது. இந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சத்துணவு திட்டத்திற்கு தினசரி நாமக்கல் மண்டலத்தில் இருந்து சராசரியாக 40 லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்படுவதால் விற்பனைக்கு முட்டைகள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்